புதுப்பெண் உயிரிழப்பு: மணப் பந்தல் மரணப் பந்தலானது

புதுப்பெண் உயிரிழப்பு: மணப் பந்தல் மரணப் பந்தலானது

1 mins read
f934cc39-00e8-4733-a2cf-51c6736810a7
கொரோனா தொற்று இல்லை என முடி வான நிலையில் மரணமடைந்த ஸ்ரீவாணி. படம்: இந்திய ஊடகம் -

ஹைதராபாத்: தெலுங்­கானா மாநி­லம் நாகர்­ கர்­னூல் மாவட்­டத்­தைச் சேர்ந்த ஸ்ரீவாணி, 19, என்­ப­வ­ருக்­கும் தண்­டூர் கிரா­மத்­தைச் சேர்ந்த நவீன் என்­ப­வ­ருக்­கும் மே 14ஆம் தேதி­யன்று திரு­ம­ணம் நடை­பெற்­றது.

பின்­னர் உற­வி­னர் வீடு­

க­ளுக்கு விருந்­திற்­குச் சென்­று­ விட்டு வீடு திரும்­பி­ய­தும் புது

ம­ணப்­பெண் ஸ்ரீவாணி திடீ­ரென மயக்­கம் அடைந்து தரை­யில் சாய்ந்­தார். இத­னை­ய­டுத்து, அவரை மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு சென்­ற­னர். அங்கு அனு­ம­திக்­கப்­பட்ட சிறிது நேரத்­தில் அப்­பெண் உயி­ரி­ழந்­தார். அவ­ரது மர­ணத்­திற்கு கொரோனா கார­ண­மாக இருக்­க­லாம் என அக்­கம்­பக்­கத்­தி­னர் கூறி­னா­லும் திரு­ம­ணத்­திற்கு முன்பு நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில் அப்­பெண்­ணுக்­குத் தொற்று இல்லை என்று உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட்ட­தாக உற­வி­னர்­கள் கூறி­னர்.

தூக்­க­மின்மை கார­ண­மாக ரத்­தக்­கொ­திப்­பு மிகுந்து ஸ்ரீவாணி உயி­ரி­ழந்­தி­ருக்­க­லாம் என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

"திரு­ம­ணத்­திற்­கா­கப் போடப்­பட்ட பந்­த­லைப் பிரிப்­ப­தற்­குள் அதே பந்­த­லில் எங்­கள் மக­ளுக்கு இறு­திச் சடங்கு செய்­யும் நிலைக்கு வந்துவிட்­டோமே," என அவ­ரது பெற்­றோர் கத­றித் துடித்­தது அங்­கி­ருந்­த­வர்­க­ளைச் சோகத்­தில் ஆழ்த்­தி­யது.