மூன்றாவது அலை: எதிர்கொள்ள மும்பை, உத்தரப்பிரதேசம் தயார்

மூன்றாவது அலை: எதிர்கொள்ள மும்பை, உத்தரப்பிரதேசம் தயார்

3 mins read
0b90ff17-a305-4723-8063-294d0ef78e45
-

ஆயிரம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 4 பிரம்மாண்ட மருத்துவ மையங்கள்

மும்பை: கொரோனா மூன்­றா­வது அலையை எதிர்­கொள்ள தயார் நிலை­யில் இருப்­ப­தாக மும்பை மாந­க­ராட்சி ஆணை­யர் இக்­பால் சிங் சலால் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா போன்ற கிரு­மி­களை வெற்றி கொள்­ள­வேண்­டு­மென்­றால் அந்­தக் கிரு­மியை விட வேக­மா­கச் செயல்­பட வேண்­டும் என்று அவர் கூறி­யுள்­ளார்.

இந்­தி­யா­வில் உள்ள மற்ற அனைத்து மாந­க­ரங்­க­ளைக் காட்­டி­லும் கொரோனா இரண்­டா­வது அலையை மும்பை மாந­க­ரம் வெற்­றி­க­ர­மாக எதிர்­கொண்டு சமாளித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் மூன்­றா­வது அலை ஏற்­ப­டும்­போது குழந்­தை­கள் அதிக அள­வில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தாக நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து அடுத்த அலை எப்­போது வரும் என்று நிபு­ணர்­கள் கணித்­துள்ள கால­கட்­டத்­துக்­கும் முன்பே, அதை எதிர்­கொள்ள மும்பை மாந­கர நிர்­வா­கம் தயா­ராக உள்­ளது என ஆணை­யர் இக்­பால் சிங் சலால் ராய்ட்­டர் செய்தி முக­மை­யி­டம் தெரி­வித்­த­தாக 'ஸ்ட்­ரெ­யிட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மும்­பை­யில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­படும் குழந்­தை­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தற்­காக நான்கு மிகப்­பெ­ரிய சிகிச்சை மையங்­களை அமைத்து வரு­கிறது மும்பை மாந­கர் நிர்­வா­கம். இதற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள சிறப்பு படை­யில் முன்­னணி குழந்தை நல நிபு­ணர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர்.

"வய­தில் சிறிய குழந்­தை­க­ளுக்கு தொற்று அறி­கு­றி­கள் அதி­க­மா­கும்­போது குழந்­தை­யின் தாயார் இல்­லா­மல் எப்­படி சிகிச்சை மையத்­தில் அனு­ம­திக்­க­மு­டி­யும்? இதைக் கவ­னத்­தில் கொண்டு முன்­னேற்­பா­டு­க­ளைச் செய்து வரு­கி­றோம். இந்த விஷ­யத்­தில் கிரு­மியை விட நாம் வேக­மா­கச் செயல்­பட வேண்­டும்," என்­கி­றார் ஆணை­யர் இக்­பால்­சிங் சலால்.

இந்­தி­யா­வின் பணக்­கார மாநி­லம் என்று குறிப்­பி­டப்­படும் மகா­ராஷ்­டி­ரா­வின் தலை­ந­க­ரான மும்பை மாந­க­ரம் கொரோ­னா­வால் தொடக்­கத்­தில் அதிக பாதிப்­பு­களை எதிர்­கொண்­டது. எனி­னும் பின்­னர் தொற்­றுப் பர­வல் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் மூன்­றா­வது அலை­யில் பாதிக்­கப்­படும் குழந்­தை­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க அமைக்­கப்­படும் புதிய கொரோனா மையங்­களில் ஒரே சம­யத்­தில் சுமார் ஆயி­ரம் குழந்­தை­க­ளுக்கு சிகிச்சை அளிக்­க­மு­டி­யும்.

"பெரிய மருத்­து­வ­ம­னை­களில் உள்ள வச­தி­கள், குழந்­தை­நல மருத்­து­வ­ருக்­கான தனிப்­ப­கு­தி­கள், தீவிர சிகிச்­சைப் பிரிவு உள்­ளிட்ட பல்­வேறு வச­தி­கள் இருக்­கும். இந்­தப் புதிய சிகிச்சை மையங்­கள் அடுத்த மாதம் தயா­ரா­கி­வி­டும்.

"மூன்­றா­வது அலை ஏற்­ப­டு­வ­தற்கு முன்பே மும்பை அதை எதிர்­கொள்­ளத் தயா­ராகி விட்­டது," என்­கி­றார் இக்­பால்­சிங் சலால்.

இதற்­கி­டைய உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் மூன்­றா­வது அலைக்கு முன்பே 10 வய­துக்கு உட்­பட்ட அனைத்­துக் குழந்­தை­க­ளின் பெற்­றோ­ருக்­கும் தடுப்­பூசி போடப்­படும் என முதல்­வர் ஆதித்­ய­நாத் யோகி அறி­வித்­துள்­ளார்.

இதற்­காக ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் பெற்­றோர்­க­ளுக்கு என சிறப்பு தடுப்­பூசி மையங்­கள் அமைக்­கப்­பட உள்­ளன.

பத்து வய­துக்கு உட்­பட்ட குழந்­தை­க­ளின் பெற்­றோரை உரிய வகை­யில் தொடர்­பு­கொண்டு தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அழைப்பு விடுக்க வேண்­டும் என சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்கு அவர் அறி­வு­றுத்தி உள்­ளார்.

குழந்­தை­க­ளு­டன் நெருக்­க­மாக இருப்­ப­தால் மூன்­றா­வது அலைக்கு முன்பே பெற்­றோ­ருக்­குத் தடுப்­பூசி போடு­வது அவ­சி­ய­மா­கிறது. இதன்­மூ­லம் குழந்­தை­க­ளுக்­கும் பாது­காப்பு கிடைக்­கிறது என்று உத்­த­ரப்­பி­ர­தேச அரசு தெரி­வித்­துள்­ள­தாக 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் 18 முதல் 44 வய­துக்கு உட்­பட்ட ஒரு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.