ஹைதராபாத்: தெலுங்கானாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்கள் பூமாலைக்குப் பதிலாக முகக்கவசத்தால் செய்யப்பட்ட மாலையை மாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
மிர்சாபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ரவிகாந்த், ஸ்ரீஜனா ஆகிய இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. அப்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணமக்கள் இவ்வாறு செய்தனர்.

