அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன: தீவிர கண்காணிப்பு

அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன: தீவிர கண்காணிப்பு

2 mins read
91171a20-d1d3-4b23-ac15-83b9fea8b486
-

10 ஆயிரம் போலிசார் சுற்றுக்காவல்; உயிர்வாயு வசதி கொண்ட படுக்கைகள் அதிகரிப்பு

புது­டெல்லி: ஊர­டங்கை ஒட்டி அனைத்து மாவட்ட எல்­லை­களும் மூடப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

சென்­னை­யில் மட்­டும் சுமார் 10 ஆயி­ரம் போலி­சார் பாது­காப்பு, கண்­கா­ணிப்­புப் பணிகளில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். மருந்து, பால், பத்­தி­ரிகை விற்­ப­னைக் கடை­கள் தவிர மற்ற அனைத்­துக் கடை­களும் மூடப்­பட்­டுள்­ள­தாக 'தினத்­தந்தி' நாளேடு செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மாவட்ட எல்­லை­க­ள் மூடப்­பட்­டதை அடுத்து நெடுஞ்­சா­லை­கள், மாவட்ட இணைப்­புச் சாலை­கள் அனைத்­தும் வாக­னப் போக்கு­வ­ரத்து இன்றி வெறிச்­சோ­டிக் காணப்­ப­டு­கின்­றன.

சென்­னை­யில் 38 பெரிய மேம்­பா­லங்­கள், 75 சிறிய மேம்­பா­லங்­கள் தடுப்பு வேலி­கள் அமைத்து மூடப்­பட்­டுள்­ளன. சென்னை முழு­வ­தும் உள்ள 408 போக்­கு­வ­ரத்து சிக்­னல்­கள் இயங்­க­வில்லை. 380 இடங்­களில் வாக­னப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

தேவை­யின்றி மாவட்­டங்­க­ளைக் கடப்­ப­வர்­கள் தடுத்து நிறுத்­தப்­படு­கின்­ற­னர். சில இடங்­களில் போலி­சார் எச்­ச­ரித்த பிற­கும் மாவட்ட எல்­லை­க­ளைக் கடக்க முயன்­ற­வர்­கள் மீது வழக்­குப் பதி­வாகி உள்­ளது.

முன்­க­ளப் பணி­யா­ளர்­கள், செய்­தி­யா­ளர்­கள், அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை ஏற்­றிச்­செல்­லும் வாகன ஓட்­டு­நர்­கள் மட்­டும் எல்லை கடக்க அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர். கார­ண­மின்றி வாக­னங்­களில் செல்­வோர் மீது வழக்­குப் பதிவு செய்­யப்­ப­டு­வ­து­டன் வாக­னங்­களும் பறி­மு­தல் செய்­யப்­ப­டு­கின்­றன. மாநிலம் முழு­வ­தும் நூற்­றுக்­கணக்­கான வாக­னங்­கள் இவ்­வாறு பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில் ஊர­டங்­கின்­போது பொது­மக்­க­ளுக்­குத் தேவை­யான அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை விநி­யோ­கம் செய்­வது குறித்து நேற்று அதி­கா­ரி­க­ளு­டன் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தீவிர ஆலோ­சனை மேற்­கொண்­டார். அப்­போது அத்­தி­யா­வ­சிய பொருட்­களை விநி­யோ­கம் செய்­வ­தில் எந்­த­வித சுணக்­க­மும் ஏற்­ப­டக்­கூ­டாது என முதல்­வர் அறி­வு­றுத்­தி­ய­தா­கத் தெரி­கிறது.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தின் 38 மாவட்­டங்­களில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­களில் உயிர்­வாயு வசதி கொண்ட படுக்­கை­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கும் நட­வ­டிக்கை தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

13,500 கூடு­தல் படுக்­கை­களில் உயிர்­வாயு வசதி அமைக்­கும் பணிக்­குத் தேவைப்­படும் மருத்­துவ உப­க­ர­ணங்­கள் சென்­னை­யில் இருந்து மாவட்­டங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்டு வரு­கின்­றன. இதற்­கான ஏற்­பா­டு­களை பொதுப்­ப­ணித் துறை செய்­துள்­ளது.

சென்­னை­யில் கார், ஆம்­பு­லன்ஸ் சேவையை இது­வரை 12,293 பேர் பயன்­ப­டுத்­திப் பய­ன­டைந்­துள்­ள­தாக மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். வீடு­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு மன­நல ஆலோ­சனை வழங்க பயிற்சி மருத்­து­வர்­க­ளைக் கொண்டு மண்­ட­லக் கட்­டுப்­பாட்டு அறை­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தின் 38 மாவட்­டங்­களில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­களில் உயிர்­வாயு வசதி கொண்ட படுக்­கை­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கும் நட­வ­டிக்கை தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

13,500 கூடு­தல் படுக்­கை­களில் உயிர்­வாயு வசதி அமைக்­கும் பணிக்­குத் தேவைப்­படும் மருத்­துவ உப­க­ர­ணங்­கள் சென்­னை­யில் இருந்து மாவட்­டங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்டு வரு­கின்­றன.