மூத்த குடிமக்களுக்குப் போலிசார் உதவ ஆணையர் அறிவுறுத்து

மூத்த குடிமக்களுக்குப் போலிசார் உதவ ஆணையர் அறிவுறுத்து

1 mins read
54a610b1-6f33-43e6-b139-b046762a5cf4
-

சென்னை: மூத்த குடி­மக்­க­ளுக்­குக் காவல்­து­றை­யி­னர் தங்களால் முடிந்த உத­வி­க­ளைச் செய்­ய­வேண்­டும் என கோவை மாந­க­ரக் காவல்­துறை ஆணை­யர் தீபக் எம். தாமோர் அறி­வு­றுத்தி உள்­ளார்.

இது­தொ­டர்­பாக வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், நக­ரில் சுற்­றுக் காவல் பணி­யில் ஈடு­பட்­டுள்ள போலி­சார் தங்­கள் பகு­தி­களில் உள்ள மூத்த குடி­மக்­க­ளின் தொலை­பேசி எண்­களை வாங்கி வைத்­துக்­கொள்ள வேண்­டும் எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"அவ்­வப்­போது மூத்த குடி­மக்­களை தொலை­பே­சி­யின் மூலம் தொடர்­பு­கொண்டு போலி­சார் பேச­வேண்­டும். அவர்­க­ளுக்­குத் தேவைப்­படும் காய்­கறி, பழங்­கள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வீடு­க­ளுக்கே அனுப்பி வைப்­ப­தற்கு ஏற்­பாடு செய்ய ­வேண்­டும். ஏதே­னும் கூடு­தல் உதவி தேவைப்­ப­டுமா என்­ப­தைக் கேட்­ட­றிந்து உரிய ஏற்­பா­டு­க­ளைச் செய்­ய­வேண்­டும்," என ஆணை­யர் தீபக் எம். தாமோர் அறி­வு­றுத்தி உள்­ளார்.

தேவை­யின்றி சாலை­களில் சுற்­றித் திரி­யும் இளை­யர்­க­ளை­யும் சமூக விரோ­தி­க­ளை­யும் கண்­ட­றிந்து வாக­னங்­க­ளைப் பறி­மு­தல் செய்­ய­வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், பணிக்­குச் செல்­லும் ஊழி­யர்­களை உரிய முறை­யில் விசா­ரித்து அனு­ம­திக்க வேண்­டும் என அறி­வு­றுத்தி உள்­ளார்.

மேலும் சாலை­யோ­ரங்­களில் வசிப்­ப­வர்­க­ளுக்­கும் விலங்­கு­க­ளுக்­கும் உணவு அளிப்­ப­வர்­க­ளைத் தடுத்து நிறுத்­தா­மல், அவர்­க­ளுக்கு காவல்­துறை சார்­பில் அடை­யாள அட்­டை­கள் வழங்­க­வேண்­டும் என்­றும் தீபக் எம். தாமோர் தெரி­வித்­துள்­ளார்.