இனி வீட்டுத் தனிமை இல்லை: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

இனி வீட்டுத் தனிமை இல்லை: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

2 mins read
df10cc8d-c98b-4af5-93e5-2d5948ea9e19
-

513 மருத்துவர்கள் பலி; ஒரே நாளில் 2.21 மில்லியன் பரிசோதனைகள்

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் கிரு­மித்­தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலை­யில் இனி 'கொவிட் 19' நோயா­ளி­கள் யாரும் வீட்­டில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட மாட்­டார்­கள் என்று அம்­மா­நில அரசு அறி­வித்­துள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வில் 18 மாவட்­டங்­களில் இந்த உத்­த­ரவு உட­ன­டி­யாக அம­லுக்கு வரு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இனி மகா­ராஷ்­டி­ரா­வில் அனைத்து 'கொவிட் 19' நோயா­ளி­க­ளுக்­கும் மருத்­து­வ­ம­னை­களில் மட்­டுமே சிகிச்சை அளிக்­கப்­படும் என சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த மார்ச் மாதம் மகா­ராஷ்­டி­ரா­வில் நாள்­தோ­றும் சுமார் 60 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு வந்­த­னர். இதை­ய­டுத்து கடந்த ஏப்­ரல் 5ஆம் தேதி அங்கு ஊர­டங்கு அம­லுக்கு வந்­தது.

கடும் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வல் குறை­யத் தொடங்கி தற்­போது அன்­றாட பாதிப்பு 30 ஆயி­ரத்­துக்­கும் கீழ் வந்­துள்­ளது.

தலை­ந­கர் மும்­பை­யி­லும் கொரோ­னா­வின் தாக்­கம் வெகு­வா­கக் கட்­டுப்­பட்­டுள்ள நிலை­யில் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 325,000ஆக உள்­ளது.

இதை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அம்­மா­நில சுகா­தார அமைச்­சர் ராஜேஷ் தோபே, 18 மாவட்­டங்­களில் லேசான தொற்று அறி­கு­றி­க­ளு­டன் இருப்­ப­வர்­கள் வீட்­டி­லேயே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு வந்­த­னர் என்­றும் இனி அனைத்து நோயா­ளி­களும் மருத்­து­வ­ம­னை­களில் மட்­டுமே சிகிச்சை பெறு­வர் என்­றும் தெரி­வித்­தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதற்­காக கூடு­தல் சிகிச்சை மையங்­களை அமைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், மாவட்ட ஆட்­சி­யர்­கள் அதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

ஒரே நாளில் 2.21 மில்­லி­யன் பரிசோதனைகள்

இதற்­கி­டையே நாடு முழு­வ­தும் நேற்று முன்­தி­னம் 208,921 பேருக்­குப் புதி­தாக கிருமி தொற்­றி­யது. தற்­போது 2.49 மில்­லி­யன் பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். ஒரே­ நா­ளில் 295,955 பேர் தொற்­றுப் பாதிப்­பி­லி­ருந்து முழு­மை­யாக மீண்­டுள்­ள­னர்.

கொரோனா பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வ­தில் இந்­திய சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் புதிய உச்­சத்தை தொட்­டது. ஒரே­ நா­ளில் 2.21 மில்­லி­யன் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

513 மருத்­து­வர்­கள் உயி­ரி­ழப்பு

கொரோனா இரண்­டாம் அலை­யின் தாக்­கத்­தால் நாட்­டில் 513 மருத்­து­வர்­கள் உயி­ரி­ழந்­துள்­ள­னர். அதி­க­பட்­ச­மாக டெல்­லி­யில் 103 மருத்­து­வர்­கள் கிரு­மித்­தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­தாக இந்­திய மருத்­து­வச் சங்­கம் தெரி­வித்­துள்­ளது. பீகா­ரில் 96, உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் 41, அசா­மில் 6, தமி­ழ­கத்­தில் 18, மராட்­டி­யத்­தில் 15 மருத்­து­வர்­கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அச்­சங்­கம் மேலும் கூறி­யுள்­ளது.