திருவனந்தபுரம்: கொரோனாவுக்கு அடுத்தபடியாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கறுப்புப் பூஞ்சை நோயால் கேரளாவில் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எண்ணிக்கை அளவில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவிலும் கறுப்புப் பூஞ்சை நோய் பாதிப்புச் சம்பவங்கள் அதிக அளவில் பதிவாகி உள்ளதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் கவலை தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

