தெற்காசியாவில் 30 மில்லியன் பேர் பாதிப்பு: இந்தியாவில் குணமடையும் விகிதம் 90.34 ஆக அதிகரிப்பு

2 mins read
32e47676-eb05-4934-b977-6a2ff8d6468b
மும்பையில் கொரோனா தொற்றுப்பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன. ரயிலில் நீண்ட தூர பயணம் மேற்கொண்டு மும்பை வந்தவர்க ளுக்கு ரயில் நிலையத்தில் உடல் வெப்ப நிலை பரிசோதிக் கப்படுகிறது. படம்: தகவல் ஊடகம் -

புது­டெல்லி: தெற்­கா­சி­யா­வில் கொவிட்-19 நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 30 மில்­லி­ய­னைக் கடந்­துள்­ளது.

கொரோ­னா­வால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­க­ளின் பட்­டி­ய­லில் இரண்­டா­வது இடத்­தில் உள்ள இந்­தியா, கொரோனா இரண்­டா­வது அலை பரவாமல் தடுக்க கடு­மை­யா­கப் போராடி வரு­வ­தாக 'ஸ்ட்­ரெ­யிட்ஸ் டைம்ஸ்' செய்தி தெரி­விக்­கிறது.

தெற்­கா­சிய பகு­தி­யைச் சேர்ந்த இந்­தியா, பங்­ளா­தேஷ், பாகிஸ்­தான், பூடான், நேப்­பா­ளம், மாலத்­தீவு, இலங்கை ஆகிய நாடு­க­ளில்­தான் உல­க­ள­வி­லான ஒட்­டு­மொத்த கொரோனா தொற்­றுச் சம்­ப­வங்­களில் 18 விழுக்­காடு பதி­வாகி உள்­ளது.

மேலும் கொரோனா பாதிப்­பால் உல­க­ள­வில் உயி­ரி­ழந்­த­வர்­களில் 10 விழுக்­காட்­டி­னர் இந்த நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளா­வர். இந்­நி­லை­யில் உண்­மை­யான பாதிப்பு, இறப்பு எண்­ணிக்­கையை இந்­நா­டு­கள் மறைப்­ப­தா­க­வும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

இந்­திய நில­வரம்

இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றில் இருந்து குண­ம­டை­யும் விகி­தம் 90.34 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது என மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் புதி­தாக கிருமி தொற்­றி­யோர் எண்­ணிக்கை மீண்­டும் இரு­நூ­றா­யி­ரத்­துக்­கும் குறை­வாக பதி­வாகி உள்­ளது.

கடந்த 44 நாட்­க­ளுக்­குப் பிறகு அன்­றாட எண்­ணிக்கை இந்த அள­வுக்­குக் குறைந்­தி­ருப்­ப­தாக அந்த அமைச்சு சுட்­டிக் காட்­டி­யுள்­ளது.

கொரோனா பாதிப்­பில் இருந்து குண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை 24,893,410 ஆகக் கூடி­யுள்­ளது. நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் 259,459 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர்.

குண­ம­டை­யும் விகி­தம் 90.34 விழுக்­கா­டா­க­வும் உயி­ரி­ழப்பு 1.16 விழுக்­கா­டா­க­வும் உள்­ளது. நாடு முழு­வ­தும் 2.34 மில்­லி­யன் பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர் என்று சுகா­தார அமைச்சு அறிக்கை வழி தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே கேர­ளா­வில் ஊர­டங்கு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. கணினி, கைபேசி, கண்­ணாடி, காது கரு­வி­கள் உள்­ளிட்ட பொருட்­களை விற்­கும் கடை­கள் வாரத்­தில் 2 நாட்­கள் திறந்­தி­ருக்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த மும்பை மாந­க­ராட்சி மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­கள் சிறப்­பா­னவை என மும்பை உயர்­நீ­தி­மன்­றம் கூறி­யுள்­ளது.