'உயிர்காக்கும் மருந்துகளுக்கான வரியை நீக்க காங்கிரஸ் கட்சி கோரிக்கை

'உயிர்காக்கும் மருந்துகளுக்கான வரியை நீக்க காங்கிரஸ் கட்சி கோரிக்கை

1 mins read
60ccb034-e550-49ed-a716-2e309b807a15
-

புது­டெல்லி: கொரோ­னா­வுக்கு எதி­ரான போரில் பயன்­படும் உயிர் காக்­கும் மருந்­து­கள், மருத்­துவ உப­க­ர­ணங்­க­ளுக்கு சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்­கப்­ப­டு­வ­தற்கு காங்­கி­ரஸ் பொதுச்­செ­ய­லா­ளர் பிரி­யங்கா காந்தி எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளார்.

அவ்­வ­ரியை உட­ன­டி­யாக நீக்க வேண்­டும் என்று அவர் தனது டுவிட்­டர் பக்­கத்­தில் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

கொரோ­னா­வால் பாதிக்­கப்­படும் மக்­கள் ஆம்­பு­லன்ஸ்­க­ளுக்­கா­க­வும் மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கை­க­ளுக்­கா­க­வும் உயிர்­வாயு, மருந்து, தடுப்­பூ­சி­க­ளுக்­கா­க­வும் தடு­மாறி வரு­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில் உயிர்­காக்­கும் பொருட்­க­ளுக்­கும் மருந்­து­க­ளுக்­கும் மத்­திய அரசு சரக்கு சேவை வரி விதிப்­பது அதன் கொடூ­ரத்­தை­யும் உணர்­வற்ற நிலை­யை­யும் காட்­டு­கிறது," என்று பிரி­யங்கா காந்தி குறிப்­பிட்­டுள்­ளார்.

கொரோனா சிகிச்­சை­யு­டன் தொடர்­பு­டைய, பயன்­பாட்­டில் உள்ள பொருட்­க­ளின் பட்­டி­ய­லை­யும் தமது பதி­வில் வெளி­யிட்­டுள்­ளார்.

நிர்­மலா சீதா­ரா­மன் தலை­மை­யில் ஜிஎஸ்டி கவுன்­சில் கூட்­டம் நேற்று நடை­பெற்ற நிலை­யில் பிரி­யங்கா காந்தி இவ்­வாறு பதி­விட்­டி­ருந்­தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.