மகாராஷ்டிரா: 29 நாள்களில் ஒரு மில்லியன் பேருக்கு பாதிப்பு

மகாராஷ்டிரா: 29 நாள்களில் ஒரு மில்லியன் பேருக்கு பாதிப்பு

2 mins read
7e33fc4c-f0d5-4226-b3b2-2c52d4b0e129
-

19 ஆயிரம் பேர் பலி; கேரளாவில் ஜூன் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் கடந்த ஒரு மாதத்­துக்­குள் கொரோனா கிரு­மித்­தொற்­றால் புதி­தாக ஒரு மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த 29 நாள்­களில் அங்கு 19 ஆயி­ரம் பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக மகா­ராஷ்­டிர சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் அங்கு கடந்த பத்து தினங்­க­ளாக புதி­தாக கிருமி தொற்­றி­யோர் எண்­ணிக்கை 30 ஆயி­ரத்­துக்­கும் கீழ் பதி­வாகி வரு­கிறது.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் மகா­ராஷ்­டிர மாநி­லம் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர், மாண்­டோர் எண்­ணிக்­கை­யில் தொடர்ந்து முத­லி­டத்­தில் உள்ள மகா­ராஷ்­டி­ரா­வில், ஏப்­ரல் மாதத்­துக்கு முன்பு கொரோனா இரண்­டாம் அலை­யால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் அன்­றாட எண்­ணிக்கை 70 ஆயி­ரத்தை எட்­டிப் பிடித்­தது.

நடப்பு மே மாதத்­தில்­தான் அங்கு கொரோனா உயி­ரி­ழப்பு உச்­சத்தை அடைந்­துள்­ளது. இம்­மா­தத்­தின் முதல் 29 நாள்­களில் மட்­டும் 1.1 மில்­லி­யன் பேருக்கு கிருமி பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. 19,738 பேர் உயி­ரி­ழந்துவிட்­ட­னர்.

கடந்த ஏப்­ரல் 22ஆம் தேதி மகா­ராஷ்­டி­ரா­வில் ஊர­டங்கு அம­லுக்கு வந்­தது. இதன் பல­னாக தொற்­றுப் பர­வல் மெல்ல கட்­டுக்­குள் வரு­வ­தாக அம்­மா­நில சுகா­தாரத் துறை தெரி­வித்­துள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை அம்­மா­நி­லத்­தில் புதிய நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 20,295ஆக பதி­வாகி உள்­ளது. இதே­வே­ளை­யில் 39,964 பேர் தொற்­றி­லி­ருந்து விடு­பட்­டுள்­ள­னர். இந்நிலையில் ஊர­டங்கை மேலும் நீட்­டிக்க மகா­ராஷ்­டிர அரசு முடிவு செய்­துள்­ளது. அங்கு 12க்கும் மேற்­பட்ட மாவட்­டங்­களில் தொற்­றுப் பர­வல் எதிர்­பார்த்த அள­வில் குறை­ய­வில்லை என்­ப­தால் ஊர­டங்கை நீட்­டிக்க அரசு முடிவு செய்­துள்­ள­தா­கத் தெரி­கிறது.

கேரள மாநில நில­வ­ரம்

இதற்­கி­டையே கேர­ளா­வில் தற்­போது அம­லில் உள்ள ஊரடங்கு உத்­த­ரவு ஜூன் 9ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக அம்மாநில­ மு­தல்­வர் பின­ராயி விஜ­யன் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே கேர­ளா­வில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 23,513 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 233,034 ஆக கூடி­யுள்­ளது. தொற்­றுப் பாதிப்­பி­லி­ருந்து 28,100 குண­ம­டைந்­துள்­ள­னர். நேற்று முன்­தி­னம் 198 பேர் உயி­ரி­ழந்­து­விட்ட நிலை­யில் இது­வரை உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 8,456ஆக உள்­ளது என்று அம்­மா­நில சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.