தடுப்பூசி பற்றாக்குறை: காங்கிரசார் போராட்டம்

தடுப்பூசி பற்றாக்குறை: காங்கிரசார் போராட்டம்

1 mins read
ec3ad3c7-e21c-402d-a7f8-c6a0435139f0
அமிர்தசரசில் தடுப்பூசிப் போட்டுக்கொள்ளும் பெண். படம்: ஏஎஃப்பி -

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் கொரோனா தடுப்­பூ­சிக்­குப் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளதை காங்­கி­ரஸ் கட்சி கண்­டித்­துள்­ளது. இந்­நி­லை­யில், அக்­கட்சி சார்­பில் மத்­திய அர­சைக் கண்­டித்து மும்­பை­யில் நேற்று முன்­தி­னம் போராட்­டம் நடை­பெற்­றது.

மகா­ராஷ்­டி­ரா­வில் தடுப்­பூசி பற்­றாக்­குறை கார­ண­மாக 45 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு மட்­டுமே தடுப்­பூசி போடப்­ப­டு­வ­தாக காங்­கி­ரஸ் கட்­சி­யின் மும்பை பகுதி தலை­வர் பாய் ஜக்­தாப் கூறி­யுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் மும்­பை­யின் பல்­வேறு பகு­தி­களில் காங்­கி­ர­சார் மனி­தச் சங்­கிலி அமைத்து போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இதன்­பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பாய் ஜக்­தாப், கொரோனா தடுப்பு மருந்தை பெரு­ம­ள­வில் உல­க­ள­வில் உற்­பத்தி செய்­யும் நாடு இந்­தி­யா­தான் என்­றார்.

"பிர­த­மர் மோடியோ உள்­நாட்­டில் உற்­பத்தி செய்­யப்­பட்ட தடுப்­பூ­சி­களை வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி விட்­டார். இதன் கார­ண­மாக மக்­கள் தடுப்­பூசி பற்­றாக்­கு­றை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

"உல­கின் பல்­வேறு நாடு­களில் கொரோனா தடுப்­பூசி அந்­நாட்டு குடிமக்களுக்கு இல­வ­ச­மாகப் போடப்­ப­டு­கிறது.

"ஆனால் இந்­தி­யா­வில் மட்டும் பணம் கொடுத்­தால்­தான் தடுப்­பூசி போடு­கின்­ற­னர். இதை ஏற்க இயலாது," என்று பாய் ஜக்­தாப் மேலும் குற்­றம் சாட்­டி­னார்.