பத்து மருத்துவமனைகளின் சிகிச்சை உரிமம் ரத்து

பத்து மருத்துவமனைகளின் சிகிச்சை உரிமம் ரத்து

1 mins read
f466ac90-bb10-463b-8100-cd2f52ad72e2
-

ஹைத­ரா­பாத்: கொரோனா சிகிச்­சைக்­காக அதிக கட்­ட­ணம் வசூ­லித்த 10 தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளின் கொரோனா சிகிச்­சைக்­கான உரி­மத்தை தெலுங்­கானா அரசு அதி­ர­டி­யாக ரத்து செய்­துள்­ளது.

தற்­போது கொரோனா தொற்­றுப் பாதிப்­புக்­காக சிகிச்சை பெற்று வரும் நோயா­ளி­கள் குண­மடைந்த பின்­னர் புதிய கொரோனா நோயா­ளி­களைச் சிகிச்­சைக்­காக அம்­ம­ருத்­து­வ­ம­னை­கள் அனு­ம­திக்க இய­லாது என அம்­மா­நில சுகா­தா­ரத்துறை தெரி­வித்­தது.

தெலுங்­கா­னா­வில் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் கொரோனா நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்க அதிக கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­வ­தாக தொடர் புகார்­கள் எழுந்­தன. இதை­ய­டுத்து சுகா­தா­ரத் துறை அம்­ம­ருத்­து­வ­ம­னை­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தது.

மேலும், இத்­த­கைய புகார்­கள் குறித்து சுகா­தா­ரத் துறை­யின் அதி­கா­ரி­கள் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். அப்­போது பத்து தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் அரசு விதி­மு­றை­களை மீறி கொரோனா நோயா­ளி­யி­டம் அதிக கட்­ட­ணம் வசூ­லித்­தது உறு­தி­யா­னது. அவை சுகா­தார நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்­று­வ­தில்லை என்­ப­தும் தெரி­ய­வந்­தது. இதை­ய­டுத்து அம்­ம­ருத்­து­வ­ம­னை­க­ளுக்கு கொரோனா சிகிச்­சைக்­கான உரி­மம் ரத்­தா­னது.

அதிக கட்­ட­ணம் வசூ­லிப்­பது தொடர்­பாக தெலுங்­கா­னா­வில் மேலும் 21 மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு விளக்­கம் கேட்டு அம்­மா­நில அரசு நோட்­டீஸ் அனுப்பி உள்­ளது.