புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக பரவலாகப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
அந்த மருந்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது என்றும் தேவைக்கும் அதிகமாக அது விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதிரெம்டெசிவிர் உற்பத்தியானது 33 ஆயிரம் குப்பிகளாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர், தற்போது நாள்தோறும் 350,000 குப்பிகள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும், முன்பு 20 ஆலைகளில் மட்டுமே இம்மருந்து உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கை 60 ஆலைகளாக அதிகரித்திருப்பதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அவசர தேவைகளுக்காக 50 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகளை மத்திய அரசு கொள்முதல் செய்யும் என்றார் அவர்.

