புதுடெல்லி: காஸா தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது ஐநா மன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது.
47 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஐநா மனித உரிமை மன்றத்தின் ஜெனீவாவில் உள்ள தலைமையகத்தில் வியாழக்கிழமை அன்று தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த மன்றத்தில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய உறுப்பு நாடுகள் சார்பில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 13 உறுப்பு நாடுகள் புறக்கணித்தன. அதே சமயம் சீனா, ரஷ்யா உள்ளிட்ட 24 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. இதனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
"கிழக்கு ஜெருசலம் உட்பட ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகள், இஸ்ரேலில் அனைத்துல மனித உரிமைச் சட்டங்கள், அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள் மதிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமை மன்றம் குறிப்பிட்டுள்ளது.

