மகாராஷ்டிராவில் குறையும் பாதிப்பு: தளர்வுகள் அறிவிப்பு; மும்பை, புனேயில் கடைகள் திறப்பு

மகாராஷ்டிராவில் குறையும் பாதிப்பு: தளர்வுகள் அறிவிப்பு; மும்பை, புனேயில் கடைகள் திறப்பு

2 mins read
41dbbccf-e553-4e16-a35a-0ab614ab3996
மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் ஊரடங்கின்போது சாலையில் சுற்றித்திரிந்த நாய்களுக்கு தன்னார்வலர் ஒருவர் உணவளிக்கிறார். படம்: ஏஎஃப்பி -

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் கிரு­மித் தொற்று பாதிப்பு சீராக குறைந்து வரு­வ­தால் அம்­மா­நில அரசு பல்­வேறு ஊர­டங்கு தளர்­வு­களை அறி­வித்து வரு­கிறது. இந்­நி­லை­யில் மும்­பை­யில் வணிக வளா­கங்­கள் தவிர்த்து மற்ற அனைத்­துக் கடை­க­ளை­யும் திறக்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

திங்­கள் முதல் வெள்ளி வரை, காலை 7 மணி முதல் மதி­யம் 2 மணி வரை இந்­தக் கடை­கள் திறந்­தி­ருக்­கும். அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருட்­களை விற்­கும் தனிக்­க­டை­க­ளைத் திறப்­பது குறித்து அந்­தந்த மாவட்ட, மாந­க­ராட்சி நிர்­வா­கங்­கள் சூழ்­நி­லைக்­கேற்ப முடி­வெ­டுக்­கும் என முதல்­வர் உத்­தவ் தாக்­கரே தெரி­வித்­துள்­ளார்.

மும்பை, பூனே நக­ரங்­களில் நேற்று அனைத்து வகை­யான கடை­களும் திறக்­கப்­பட்­டன. அவ்­விரு மாந­க­ராட்சி நிர்­வா­கங்­களும் காலை 7 முதல் மதி­யம் 2 மணி வரை காய்­கறி, மளிகை உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய கடை­க­ளைத் திறக்க அனு­மதி அளித்­துள்­ளன.

வரும் 15ஆம் தேதி வரை இந்த அறிவிப்பும் அனுமதியும் அமலில் இருக்கும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதே­போல் புனே நக­ரி­லும் செவ்­வாய்க்­கி­ழமை தொடங்கி அடுத்த 10 தினங்­க­ளுக்கு, காலை 7 மணி முதல் மதி­யம் 2 மணி வரை கடை­க­ளைத் திறக்­க­லாம் என புனே மாந­க­ராட்சி அனு­மதி அளித்­துள்­ளது. மேலும் மதுக்­க­டை­களும் அங்கு திறக்­கப்­பட உள்­ளன.

நாசிக், நாக்­பூர் உள்­ளிட்ட நக­ரங்­க­ளி­லும் வணிக வளா­கங்­கள் தவிர்த்து இதர அனைத்து வகை கடை­க­ளை­யும் திறக்­க­லாம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே கர்­நா­ட­கா­வில் கொரோனா தொற்­றுப் பர­வல் விகி­தம் குறைந்­தி­ருப்­ப­தால் ஊர­டங்கை நீட்­டிப்­பது குறித்து அரசு விரை­வில் முடி­வெ­டுக்க இருப்­ப­தாக அம்­மாநில சுகா­தார அமைச்­சர் சுதா­கர் தெரி­வித்­துள்­ளார்.

50 விழுக்­கா­டாக இருந்த தொற்­றுப்­ப­ர­வல் விகி­தம் அம்­மா­நி­லத்­தில் இப்­போது 15 விழுக்­கா­டாக குறைந்­துள்­ளது. மைசூர் உள்­ளிட்ட சில மாவட்­டங்­களில் மட்­டும் பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதை­ய­டுத்து 5ஆம் தேதிக்கு முன்பு ஊர­டங்கு குறித்து கர்­நா­டக அரசு புதிய அறி­விப்பை வெளி­யி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என கர்நாடக அரசின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.