பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வலியுறுத்து
புதுடெல்லி: கிருமித்தொற்றால் பெற்றோர் உயிரிழக்கும் போது பாதிக்கப்படும் சிறுவர்களின் நிலைமை குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) உச்ச நீதிமன்றத்தில் சில தகவல்
களைக் கூறியுள்ளது.
''2020 ஏப்ரல் முதல் 2021 ஜூன் 5 வரையிலான கணக்கெடுப்புப்படி கொரோனா கிருமித்தொற்றால் 30,071 சிறார்கள் தங்களது தாயையோ தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர். இவர்களில் 15,620 பேர் சிறுவர்கள், 14,447 சிறுமிகள், 4 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். 3,621 சிறார் தங்களது பெற்றோர் இருவரையுமே இழந்துள்ளனர். 274 சிறுவர்கள் அநாதைகளாக விடப்பட்டுள்ளனர்," என்று ஆணையம் கூறியது.
இவ்வாறு ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பது சட்ட விரோதமானது என்றும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு திங்கட் கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் வாதாடிய மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.எம்.நடராஜ், "தத்தெடுப்பது தொடர்பாக மத்திய அரசு உருவாக்கி உள்ள நடைமுறைகளுக்கு பின்னரே குழந்தைகளை தத்தெடுப்பது சட்டபூர்வமானதாக இருக்கும். இந்த நடைமுறைகளை பின்பற்றாமல் தத்தெடுத்தால் அது செல்லாது," என்றார்.
பின்னர் நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு, ''ஆதரவற்ற குழந்தைகள் சட்டவிரோதமாக தத்தெடுக்கப் படுவதைத் தடுக்க இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடும். ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு அவர்களது எதிர்காலம் காக்கப்பட வேண்டும். சட்ட விரோதமாகத் தத்தெடுப்பதைத் தடுக்க தேவையான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் விரைவில் பிறப்பிக்கும்,'' என்று கூறியது.

