236 மில்லியன் பேருக்கு தடுப்பூசி

1 mins read
c84c5395-c246-4bb4-ade5-9034ca6f5f7f
-

புது­டெல்லி; தடுப்­பூசி போடத் தகுதி உள்ள அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி இல­வ­ச­மா­கப் போடப்­படும் என்­றும் இதனை உள்­ள­டக்­கிய புதிய தடுப்­பூசி கொள்கை வரும் 21ஆம் தேதி நடப்­புக்கு வரும் என்­றும் பிர­த­மர் மோடி நேற்று முன்­தி­னம் அறி­வித்­தார். இதற்­கி­டையே திங்­கட்­கி­ழமை மாலை வரை இந்­தியா முழு­வ­தும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­

க­ளின் எண்­ணிக்கை 236.1 மில்­லி­யனை (23.61 கோடி) தொட்­டு­விட்­ட­தாக மத்­திய சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது. இவர்­களில் 189.5 மில்­லி­யன் பேர் முதல் தவணை தடுப்­பூ­சிை­ய­யும் 46.6 மில்­லி­யன் பேர் இரு தடுப்­பூசிக­ளை­யும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். திங்­கட்­கி­ழமை மாலை வரை­யி­லான 24 மணி நேரத்­தில் மட்­டும். 3.36 மில்­லி­யன் பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தா­க­வும் நாடு முழு­வ­தும் தடுப்­பூசி போடும் பணி­கள் வேக­ம­டைந்­தி­ருப்­ப­தா­க­வும் சுகா­தா­ரத் துறை கூறி­யது.