புதுடெல்லி; தடுப்பூசி போடத் தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்றும் இதனை உள்ளடக்கிய புதிய தடுப்பூசி கொள்கை வரும் 21ஆம் தேதி நடப்புக்கு வரும் என்றும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கிடையே திங்கட்கிழமை மாலை வரை இந்தியா முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்
களின் எண்ணிக்கை 236.1 மில்லியனை (23.61 கோடி) தொட்டுவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 189.5 மில்லியன் பேர் முதல் தவணை தடுப்பூசிையயும் 46.6 மில்லியன் பேர் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். திங்கட்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும். 3.36 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமடைந்திருப்பதாகவும் சுகாதாரத் துறை கூறியது.