தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
3a37a022-9e48-4069-bcaa-a87cf22a2e4b
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் தொடர்ந்து இரண்­டா­வது நாளாக புதி­தாக கிருமி தொற்­றி­யோர் எண்­ணிக்கை நூறா­யி­ரத்­துக்­கும் கீழ் பதி­வாகி உள்­ளது.

பல்­வேறு மாநி­லங்­களில் ஊர­டங்கு கார­ண­மாக தொற்றுப் பர­வல் ஓர­ளவு கட்­டுக்­குள் வந்துள்­ளது. 92,596 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றிய நிலை­யில் குண­ம­டை­வோர் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ளது.

தற்­போது சிகிச்சை பெற்று வரு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 1.2 மில்­லி­ய­னாக உள்­ளது என்­றும் நேற்று முன்­தி­னம் 162,664 பேர் குண­ம­டைந்து வீடு திரும்பி உள்ளனர் என்­றும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அதே­வே­ளை­யில் கிரு­மித்­தொற்­றால் 2,219 நோயா­ளி­கள் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். நாட்­டின் ஒட்­டு­மொத்த பலி­ எண்­ணிக்கை 353,528ஆக கூடி­யுள்­ளது.

63 நாட்­க­ளுக்­குப் பின்­னர் கொரோனா கிரு­மித்­தொற்­றின் அன்­றாட எண்­ணிக்கை நூறா­யிரத்­துக்­கும் கீழ் பதி­வாகி வருவது மக்­க­ளுக்கு நிம்­மதி அளித்­துள்­ளது.

இதற்­கி­டையே, மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் கொரோனா தடுப்­பூ­சி­கள் இல­வ­ச­மாக வழங்­கப்­படும் என மத்திய அரசு தெரி­வித்­துள்­ளது.

தடுப்­பூசி விநி­யோ­கம் தொடர்­பாக மத்­திய அரசு புதிய வழி­காட்டு நெறி­மு­றை­க­ளை­யும் வெளி­யிட்­டுள்­ளது. அதன்­படி, கொடுக்­கப்­படும் தடுப்­பூ­சி­களை மாநி­லங்­கள் வீண­டித்துவிட்­டால் அது ஒதுக்­கீ­டு­களில் நிச்­ச­யம் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்று தெரி­வித்­துள்ள மத்­திய அரசு, தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் கட்­ட­ணம் செலுத்தி தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வசதி படைத்­த­வர்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வார்­கள் என குறிப்­பிட்­டுள்­ளது.

"தடுப்­பூசி போடு­வ­தில் யாருக்கு முன்­னு­ரிமை அளிப்­பது என்­ப­தில் மாநில அரசு கவ­னம் செலுத்த வேண்­டும். புதிய வழி­காட்டு நெறி­முறை­கள் ஜூன் 21ஆம் தேதி முதல் அம­லுக்கு வரும்," என்­றும் மத்­திய அரசு மேலும் தெரி­வித்­துள்­ளது.

மாநில நில­வ­ரங்கள்

இந்­நி­லை­யில் தெலுங்­கானா மாநி­லத்­தில் ஊர­டங்கு உத்­த­ரவு இம்­மா­தம் 19ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­ச­ம­யம் அம்­மா­நில அரசு சில தளர்­வு­க­ளை­யும் அறி­வித்­துள்­ளது.

பல மாவட்­டங்­களில் கொரோனா பாதிப்பு கட்­டுக்­குள் வர­வில்லை. இதை­ய­டுத்தே ஊரடங்கு நீட்டிக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் அம்மாநில அரசு கூறி­யுள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வில் அமல்­படுத்­தப்­பட்ட ஊர­டங்கு உத்­த­ரவு பல­ன­ளித்­துள்­ளது. அங்கு அன்றாட பாதிப்பு எண்­ணிக்கை 11 ஆயி­ரத்­துக்­கும் கீழ் வந்­துள்­ளது. அதே­ச­ம­யம் நோயி­லி­ருந்து மீண்டு வரு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

கர்­நா­ட­கா­வில் கிரு­மித் தொற்­றால் உயி­ரி­ழப்­போர் எண்­ணிக்கை குறைந்து வரு­வ­தாக அம்­மா­நில சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் அங்கு 9,808 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறு­தி­யா­னது. ஒரே நாளில் 179 பேர் தொற்­றுக்­குப் பலி­யாகிவிட்­ட­னர். இதை­ய­டுத்து ஒட்­டு­மொத்த மரண எண்­ணிக்கை 32,099ஆக கூடி­யுள்­ளது. எனி­னும் ஒரே­நா­ளில் 23,449 பேர் குண­ம­டைந்து வீடு திரும்பியுள்­ள­னர்.

இதற்கிடையே மூன்றாவது அலைக்கு முன்பு ஒடிசாவில் தினமும் 3 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அன்றாட தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரிவு