மாநிலங்களுக்கு விநியோகிக்க 440 மில்லியன் தடுப்பூசிகள் வாங்கும் மத்திய அரசு

மாநிலங்களுக்கு விநியோகிக்க 440 மில்லியன் தடுப்பூசிகள் வாங்கும் மத்திய அரசு

1 mins read
c8de07bb-1e2c-4cae-9eed-66b8927e1cc0
-

புது­டெல்லி: கொரோனா தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையைத் துரி­தப்­ப­டுத்த ஏது­வாக 440 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை மத்­திய அரசு கொள்­மு­தல் செய்­கிறது.

அவற்­றுள் 250 மில்­லி­யன் கோவி­ஷீல்ட் தடுப்­பூ­சி­கள் என்­றும் பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­தி­டம் இருந்து 190 மில்­லி­யன் கோவேக்­சின் தடுப்­பூ­சி­கள் வாங்­கப்­படும் என்­றும் தெரிய வந்­துள்­ளது.

கொரோனா தடுப்­பூ­சி­களை மத்­திய அரசு மொத்­த­மாக வாங்கி அவற்றை மாநில அர­சு­க­ளுக்கு இல­வ­ச­மாக விநி­யோ­கிக்க வேண்­டும் எனப் பர­வ­லாக எழுந்த கோரிக்­கை­களை ஏற்­றுக்கொண்­டுள்­ளது மத்­திய அரசு.

இதை­ய­டுத்து தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையை வேகப்­ப­டுத்த மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

அதன் முதற்­கட்­ட­மாக சீரம் இந்­தியா, பாரத் பயோ­டெக் ஆகிய இரு நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்­தும் பெரிய எண்­ணிக்­கை­யி­லான தடுப்­பூ­சி­கள் வாங்­கப்­ப­டு­கின்­றன. அதன்­படி 440 மில்­லி­யன் தடுப்­பூ­சி­க­ளுக்­கான தொகையை மத்­திய அரசு செலுத்­து­கிறது.

இந்த தடுப்­பூ­சி­கள் டிசம்­பர் 2021 வரை பொதுமக்­க­ளுக்­குச் செலுத்­தப்­படும். இந்­நி­லை­யில், கூடு­த­லாக கொள்­மு­தல் செய்­வ­தற்­கான 30 விழுக்­காடு முன்­ப­ணம் இரண்டு நிறு­வ­னங்­க­ளுக்­கும் வழங்­கப்­பட்­டு­விட்­ட­தாக தமிழ் ஹிந்து இணை­யத்­த­ளச் செய்தி தெரி­விக்­கிறது.

தற்போது நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த நடவடிக்கை மேலும் வேகமெடுக்கும் எனத் தெரிகிறது.