குவாலியர்: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் எனும் கோரிக்கையைக் கைவிட்டால் மட்டுமே விவசாயிகளுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை நடத்த இயலும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்குப் பயனளிக்கக்கூடிய மாற்றுவழிகளை முன்வைத்தால் அதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயார் என்று குவாலியரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
"எண்ணெய்யில் கலப்படம் செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்தி உள்ளது. அதன் காரணமாகவே கடுகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கை விவசாயிகளுக்குப் பயனளிக்கும்," என்றார் அமைச்சர் தோமர்.
விவசாயிகளின் நலன் குறித்து தான் மத்திய அரசு எப்போதும் யோசிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், போராடும் விவசாயிகள் இதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
"புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயகளின் கோரிக்கைகள் ஏற்கெனவே ஏற்கப்பட்டுவிட்டன," என்றார் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

