புதுடெல்லி: வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் மெகுல் சோக்சி அடுத்த சில வாரங்களில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்துள்ளார்.
டொமினிக் நாட்டில் பின்பற்றப்படும் விதிமுறைகள் குறித்து தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சில மாதங்கள் அல்லாமல் சில வாரங்களுக்குள் மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்து வரமுடியும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
மெகுல் சோக்சி வழக்கில் ஹரிஷ் சால்வேயின் உதவியை இந்திய அரசு கோரி இருப்பதாகக் கூறப்படுகிறது.

