பெட்ரோல் விலை உயர்வு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

1 mins read
158ae20f-d1bc-4903-beb9-d9289b5ade54
-

புது­டெல்லி: பெட்­ரோல், டீசல் விலை உயர்­வைக் கண்­டித்து ஜூன் 11ஆம் தேதி நாடு தழு­விய அள­வில் போராட்­டம் நடத்­தப்­படும் என காங்­கி­ரஸ் கட்சி அறி­வித்­துள்­ளது.

பெட்­ரோல் நிலை­யங்­கள் முன்பு காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் போராட்­டத்­தில் ஈடு­பட உள்­ள­னர். அண்­மைய சில தினங்­க­ளாக பெட்­ரோல், டீசல் விலை கடு­மை­யாக உயர்ந்து வரு­கிறது. சில மாநி­லங்­களில் ஒரு லிட்­டர் பெட்­ரோல் விலை 100 ரூபா­யைக் கடந்­து­விட்­டது.

அனைத்­து­லக சந்­தை­யில் கச்சா எண்­ணெய் விலை அதி­க­ரித்­தி­ருப்­பதே இந்­தி­யா­வி­லும் விலை உயர்­வுக்­குக் கார­ண­மாகிவிட்­டது என இந்­திய பெட்­ரோ­லிய அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் தெரி­வித்­துள்­ளார்.

பெட்­ரோல் நிலை­யங்­க ளில் பணம் செலுத்­தும்­போது பொது­மக்­க­ளால் பிர­த­மர் மோடி அர­சின் பண­வீக்க உயர்வை உணர முடி­யும் என காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி தெரிவித்­துள்­ளார்.