எல்லையில் பறந்த சீன போர் விமானங்கள்

எல்லையில் பறந்த சீன போர் விமானங்கள்

2 mins read
7b0f7f5c-e04d-40b0-a3d0-aff45ac4ba6f
-

புது­டெல்லி: எல்­லைப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண இரு­த­ரப்­பும் ஒத்­து­ழைக்க வேண்­டும் என இந்­தி­யா­வுக்­கான சீனத் தூதர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இணை­யம் வழி பங்­கேற்ற நிகழ்வு ஒன்­றில் பேசிய அவர், இரு­த­ரப்­பி­ன­ரும் ஒரு­வரை ஒரு­வர் குறை கூறிக்கொண்­டி­ருப்­ப­தில் அர்த்­த­மில்லை என்­றார்.

இதற்­கி­டையே லடாக் எல்­லைப் பகு­தி­யில் சீனப் போர் விமா­னங்­கள் திடீ­ரென பயிற்­சி­யில் ஈடு­பட்­டன. இத­னால் அங்கு பதற்­றம் நில­வு­கிறது.

"இரு நாடு­க­ளுக்கும் இடையே கருத்து வேறு­பா­டு­கள் ஏற்­ப­டு­வது புதிய விஷ­ய­மல்ல. பேச்­சு­வார்த்தை, கலந்­தா­லோ­சிப்பு மூலம் எல்­லைப் பிரச்­சி­னைக்கு உரிய தீர்வு காண­மு­டி­யும் என பெய்­ஜிங் நிர்­வா­கம் கரு­து­கிறது," என சீனத் தூதர் சன் வெய்­டோங் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

"இரு நாடு­களும் ஒன்­றுக்­கொன்று உரிய மரி­யாதை தர­வேண்­டும். பிரச்­சி­னை­க­ளுக்கு இரு­த­ரப்­பி­ன­ரும் ஏற்­றுக்­கொள்­ளும் வகை­யில் தீர்வு காணப்­பட வேண்­டும். அதே­வே­ளை­யில் நாட்­டின் இறை­யாண்மை, பாது­காப்பு, வளர்ச்­சிக்­கான அம்­சங்­க­ளைப் பாது­காப்­ப­தில் உறு­தி­யாக நிற்­போம்," என்று சீனத் தூதர் சன் வெய்­டோங் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில் நிகழ்ந்­தது போலவே சீன ராணு­வம் இப்­போது செயல்­பட்டு வரு­வ­தாக இந்­தி­ய தரப்­பில் புகார் எழுந்­துள்­ளது. எல்­லை­யில் இருந்து படை­களை படிப்­ப­டி­யாக திரும்­பப்­பெ­றும் நடவடிக்­கையை சீனா முழு­மை­யாக மேற்­கொள்­ள­வில்லை என இந்­தியா சாடி­யுள்­ளது.

இந்­நி­லை­யில் கிழக்கு லடாக் எல்­லை­யில் சீனா­வின் 22 போர் விமா­னங்­கள் பயிற்­சி­யில் ஈடு­பட்­டன. தங்­கள் எல்­லைக்­குட்­பட்ட வான் பரப்­பில் மட்­டுமே இந்­தப் பயிற்­சியை மேற்­கொண்­ட­தாக சீனா தெரி­வித்­துள்­ளது.

எல்­லைப் பகுதி பாது­காப்­பைப் பலப்­ப­டுத்­தும் வித­மாக இந்திய விமானப்படை மிக் 29, சுகோ­ய் 30, ரஃபேல் விமா­னங்­களை நாட்டின் முக்­கிய விமா­னப்­படைத்தளங்­களில் தயார்நிலை­யில் நிறுத்தி வைத்­துள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.