கேரள தங்கக் கடத்தல் வழக்கு: மேலும் ஒருவர் கைது

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: மேலும் ஒருவர் கைது

1 mins read
0c1c8cc8-e981-45d0-97ac-ff923649b3e3
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளா­வில் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­திய தங்­கக் கடத்­தல் வழக்கு தொடர்­பில் மேலும் ஒரு முக்­கி­யக் குற்­ற­வாளி தேசிய புல­னாய்வு முக­மை­யி­டம் சிக்கி உள்­ளார்.

முக­மது மன்­சூர் என்ற அந்த ஆட­வர் துபா­யில் இருந்து கேர­ளா­வின் கோழிக்­கோடு விமான நிலை­யத்­தில் வந்­தி­றங்­கி­ய­போது அதி­ர­டி­யா­கக் கைதானார்.

திரு­வ­னந்­த­பு­ரத்­தில் உள்ள ஐக்­கிய அரபு சிற்­ற­ரசு தூத­ர­கத்­தின் பெய­ரைப் பயன்­ப­டுத்தி தங்­கக் கடத்­தல் நடந்து வந்­துள்­ளது.

இது தொடர்பாக தூத­ர­கத்­தின் முன்­னாள் ஊழி­யர் ஸ்வப்னா சுரேஷ், முக­மது ஷஃபி உள்­ளிட்­டோர் அடுத்­த­டுத்து கைதா­கி­னர்.

இந்­தக் கடத்­த­லில் கேரள அர­சி­யல் பிர­மு­கர்­கள் பல­ருக்­குத் தொடர்பு இருப்­ப­தாகக் கூறப்படுகிறது.

இந்த ­நி­லை­யில் தங்­கக் கடத்­தல் நட­வ­டிக்­கை­யின் மூளை­யா­கச் செயல்­பட்­ட­வர்­களில் ஒரு­வ­ரான முக­மது மன்­சூர் தற்­போது சிக்கி உள்­ளார்.

இந்த வழக்­கில் ஏற்­கெ­னவே கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்ள முக­மது ஷஃபி உள்­ளிட்ட பல­ரு­டன் இணைந்து முக­மது மன்­சூர் தங்­கம் கடத்தி வரு­வ­தில் முக்­கி­யப் பங்­காற்­றி­ய­தாக நம்பப்படுகிறது.

இதன் தொடர்பில் புல­னாய்வு அதி­கா­ரி­கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.