நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென அம்னோ வலியுறுத்து

1 mins read
33a5cef4-8ebc-4ff5-891c-efeabcef068d
-

கோலா­லம்­பூர்: ஆகஸ்ட் 1ஆம் தேதிக்­குப் பிறகு மலே­சி­யா­வில் அவ­ச­ர­நி­லையை நீட்­டிக்­கக்­கூ­டாது என்­றும் நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்ட அனு­ம­திக்க வேண்­டும் என்­றும் மலே­சிய மாமன்­ன­ரி­டம் அம்னோ கட்­சி­யின் தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமிடி கேட்­டுக்­கொண்­டு இருக்கிறார்.

இஸ்­தானா நெகா­ரா­வில் நேற்று மூன்­றா­வது நாளாக மாமன்­னர் அப்­துல்லா, அர­சி­யல் கட்­சித் தலை­வர்­க­ளைச் சந்­தித்து, அவர்­க­ளின் கருத்­து­க­ளைக் கேட்­ட­றிந்­தார்.

அவ்­வ­கை­யில் நேற்­றுக் காலை­கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரம் மாமன்­னரை டாக்­டர் ஸாஹிட் சந்­தித்­துப் பேசி­னார்.

அதன்­பின் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், மக்­கள் நலன் தொடர்­பான பல விஷ­யங்­கள் குறித்து மாமன்­ன­ரி­டம் கலந்­து­ரை­யா­டி­ய­தாகக் குறிப்­பிட்­டார்.

அப்­போது, ஆகஸ்ட் முதல் தேதிக்­குப் பிறகு அவ­ச­ர­நிலையை நீட்­டிக்­கக்­கூ­டாது என்றும் மாறாக, அவ­ச­ர­நி­லையை நீக்­கி­விட்­டால் கொவிட்-19 பர­வல் சார்ந்த விஷ­யங்­க­ளைச் சிறப்­பா­கக் கையா­ள­லாம் என்றும் அம்­னோ­வின் நிலைப்­பாட்­டைத் தாம் மாமன்­ன­ரி­டம் தெளி­வாக எடுத்­து­ரைத்­த­தாக டாக்­டர் ஸாஹிட் சொன்­னார்.

"நாட்­டின் ஜன­நா­ய­கத்­தைத் தற்­காப்­பதை உறு­தி­செய்ய நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்ட வேண்­டும்," என்­றார் அவர்.

முன்­ன­தாக, மாமன்­னரை நேற்று முன்­தி­னம் சந்­தித்த முன்­னாள் பிர­த­மர் டாக்­டர் மகா­தீர் முகம்­மது, தேசிய நட­வ­டிக்­கை­கள் மன்­றத்தை அமைக்க வேண்­டும் என்று பரிந்­து­ரைத்­தார். அம்­மன்­றத்­தின் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்­க­வும் அவர் முன்­வந்­தார்.

இந்­நி­லை­யில், அது­கு­றித்து தாம் மாமன்­ன­ரி­டம் விவா­திக்­க­வில்லை என்று டாக்­டர் ஸாஹிட் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, நேற்று முற்­ப­க­லில் கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரம் மாமன்­ன­ரைச் சந்­தித்த மலே­சிய இந்­திய காங்­கி­ரஸ் தலை­வர் எஸ்.ஏ. விக்­னேஸ்­வ­ரன், அதன்­பின் செய்தி­யா­ளர்­க­ளைச் சந்­திக்­கா­ம­லேயே சென்­று­விட்­டார்.