பேங்காக்: ஃபைசர் நிறுவனத்திடம் இருந்து கொவிட்-19 தடுப்பூசிகளை வாங்க தாய்லாந்து உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் அனுதின் சர்ன்விராக்குல் தெரிவித்து இருக்கிறார்.
முதற்கட்டமாக, இவ்வாண்டு இறுதிக்குள் 20 மில்லியன் தடுப்பூசிகளை ஃபைசர் நிறுவனம், தாய்லாந்துக்கு வழங்க வேண்டும்.
அத்துடன், ஜான்சன்&ஜான்சன் நிறுவனமும் நடப்பாண்டில் 500,000 தடுப்பூசிகளை தாய்லாந்துக்கு வழங்கும்.
இதுவரை ஆஸ்ட்ராஸெனக்கா, சினோவேக், சினோஃபார்ம், ஜான்சன்&ஜான்சன், மொடர்னா ஆகிய ஐந்து கொரோனா தடுப்பூசிகளுக்கு தாய்லாந்தின் உணவு, மருந்து ஆணையம் அங்கீகாரம் அளித்து இருக்கிறது.
இம்மாதம் 7ஆம் தேதி தாய்லாந்தில் பொதுமக்களுக்கான தடுப்பூசி நடவடிக்கை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இம்மாத இறுதிக்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பர் என எதிர்பார்ப்பதாக திரு அனுதின் கூறினார்.