தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரிணாமுல் காங்கிரசார் மீது மேலும் பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு: சிறப்பு விசாரணைக்கு வலியுறுத்து

2 mins read
04679cda-d1b1-458e-8bcd-ab78c9c7330b
-

கோல்­கத்தா: மேற்கு வங்க மாநி­லத்­தில் அண்­மை­யில் நடந்து முடிந்த சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்­கான முடி­வு­கள் அறி­விக்­கப்­பட்ட பின்­னர் ஆளும் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யி­ன­ரால் தாங்­கள் பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­யப்­பட்­ட­தாக பல பெண்­கள் புகார் எழுப்பி உள்­ள­னர்.

தாங்­கள் கொடூ­ர­மாக பலாத்­கா­ரம் செய்­யப்­பட்­ட­தா­க­வும் இந்த வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் குறித்து விசா­ரிக்க சிறப்­புப் புல­னாய்­வுக் குழு அமைக்­கப்­பட வேண்­டும் என்­றும் அப்­பெண்­கள் கோரி உள்­ள­னர்.

மேலும் வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் காவல்­துறை எந்­த­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என பாதிக்­கப்­பட்ட பெண்­கள் சுட்டிக்­காட்டி உள்­ள­னர்.

பாஜ­க­வைச் சேர்ந்த இருவர் அண்­மை­யில் மேற்கு வங்க மாநிலத்­தில் நிகழ்ந்த வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளின்­போது திரி­ணா­முல் காங்­கி­ரஸ் தொண்­டர்­க­ளால் கொல்­லப்­பட்­ட­தாக புகார் எழுந்­துள்­ளது.

குஜ­ராத் மாநி­லத்­தில் நிகழ்ந்த கோத்ரா கல­வ­ரம் தொடர்­பாக உச்ச­ நீ­தி­மன்­றம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையை அடுத்து சிறப்புப் புல­னாய்வுக் குழு அமைக்­கப்­பட்டதை பாதிக்­கப்­பட்ட பெண்­கள் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.

அதே­போல் மேற்கு வங்­கத் தேர்­த­லில் வெற்றி பெற்ற பிறகு திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் அரங்­கேற்­றிய கூட்­டுப் பாலி­யல் பலாத்­கா­ரச் சம்­ப­வங்­கள், படு­கொலை­கள் குறித்து விசா­ரிக்க சிறப்­புப் புல­னாய்­வுக் குழு அமைக்­கப்­பட வேண்­டும் என கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

"தேர்­தல் முடி­வு­கள் வெளி­யான பிறகு மெதி­னி­பூ­ரில் உள்ள எனது வீட்­டுக்­குள் திடீ­ரென சிலர் நுழைந்­த­னர். பின்­னர் ஆறு வயதே ஆன எனது பேர­னின் கண் முன்னே என்­னைப் பாலி­யல் பலாத்­கா­ரத்­திற்கு உட்­ப­டுத்­தி­னர். பின்­னர் வீட்­டில் உள்ள பொருள்­க­ளைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­ற­னர்," என்று 60 வய­துப் பெண்­மணி கூறி­ய­தாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளி­யிட்­டுள்­ளது. இது தொடர்­பாக உச்­ச­ நீ­தி­மன்­றத்­தில் அந்­தப் பெண்­மணி மனு அளித்­துள்­ளார்.

இதே­போல் மேலும் பல பெண்­கள் தாங்­கள் கொடூ­ர­மாக தாக்­கப்­பட்­டது, பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளா­னது குறித்த அதிர்ச்­சித் தக­வல்­களை வெளி­யிட்­டுள்­ள­னர்.

இதனால் மேற்குவங்க அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.