ஸ்ரீநகர்: ஜம்முவில் உள்ள மஜ்லின் கிராமத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்படுகிறது.
இதற்கான பூமி பூசை நேற்று முன்தினம் அக்கிராமத்தில் நடைபெற்றது.
மொத்தம் 62 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட உள்ள இக்கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுகிறது. 60 ஏக்கர் நிலத்தை காஷ்மீர் அரசு 40 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கி உள்ளதாகவும் கோவில் கட்டுமானப் பணிகள் 18 மாதங்களில் முடிவடையும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பூமி பூசை நிகழ்வில் காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா பங்கேற்றார். அப்போது மாதா வைஷ்ணவ் தேவி மண்ணில் ஏழுமலையான் கோவில் அமையவேண்டும் என்ற காஷ்மீர், வட இந்திய மக்களின் நீண்டநாள் ஆசை நிறைவேற இருப்பதாகக் குறிப்பிட்டார்.
புதிதாக அமைய உள்ள கோவிலில் வேத பாடசாலை, விடுதி, திருமண மண்டபம், பக்தர்கள் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் கட்டுமானப் பணிகள் வேகமெடுக்கும் என்றும் குறித்த காலக்கெடுவுக்குள் பணிகள் முடிவடையும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

