ராமர் கோவில் அறக்கட்டளை மீது புகார்

ராமர் கோவில் அறக்கட்டளை மீது புகார்

2 mins read
b2470618-01a5-4e62-8f57-6056646aad1d
-

லக்னோ: அயோத்தி ராமர் கோவில் அறக்­கட்­டளை மீது சமாஜ்­வாடி கட்­சி­யைச் சேர்ந்த முன்­னாள் அமைச்­சர் பவன் பாண்டே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

அயோத்­தி­யைச் சேர்ந்த பாபா ஹரி­தாஸ் என்­ப­வர் தமக்­குச் சொந்­த­மான நிலத்தை அதே பகு­தி­யைச் சேர்ந்த சுல்­தான் அன்­சாரி, ரவி மோகன் திவாரி இரு­வ­ருக்­கும் இரண்டு கோடி ரூபாய்க்கு அண்மையில் விற்­பனை செய்­ததாகவும் இந்த நில பேரத்தில்தான் முறைகேடு நடந்துள்ளது என்றும் பவன் பாண்டே கூறியுள்ளார்.

"நில விற்பனை குறித்து தக­வல் அறிந்த ராமர் கோவில் அறக்­கட்­டளை நிர்­வாகக் குழு உறுப்­பி­ன­ரான டாக்­டர் அனில் மிஸ்­ரா­வும் அயோத்தி மேயர் ரிஷி­கேஷ் உபாத்­யா­வும் உட­ன­டி­யாக சுல்­தான் அன்­சா­ரி­யை­யும் ரவி மோக­னை­யும் தொடர்பு கொண்­ட­னர். இதை­ய­டுத்து இரண்டு கோடி ரூபாய்க்கு தாங்­கள் வாங்­கிய நிலத்தை அவ்­வி­ரு­வரும் 18.5 கோடி ரூபாய்க்கு ராமர் கோவில் அறக்கட்டளைக்கு விற்­றுள்­ள­னர்," என்பது பவன் பாண்டேவின் குற்றச்சாட்டு.

இந்த நில பேரம் குறித்து சிபிஐ விசா­ரிக்க வேண்­டும் என பல்­வேறு தரப்­பி­ன­ரும் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

"ஐந்தே நிமி­டங்­களில் இந்த நில பேரம் நடந்து முடிந்­துள்­ளது. இரண்டு விற்­ப­னை­க­ளை­யும் பதிவு செய்­வ­தற்­கான பத்­தி­ரங்­கள் ஒரே தேதி­யில் வாங்­கப்­பட்­டுள்­ள­ன," என்று சமாஜ்­வாடி கட்­சி­யின் எம்­பி­யான சஞ்­சய் சிங் சுட்­டிக்­காட்டி உள்­ளார். பல லட்­சம் பக்­தர்­கள் அளித்த நன்­கொ­டை­யில் இந்த ஊழல் நடந்­துள்­ளது என்று அவர் சாடி­யுள்­ளார்.

ஆனால், இந்த குற்­றச்­சாட்டை ராமர் கோவில் அறக்­கட்­ட­ளை­யின் பொதுச்­செ­ய­லா­ளர் சம்­பக் ராய் மறுத்­துள்­ளார். பொது­மக்­களை திசை­தி­ருப்­ப­வும் அர­சி­யல் உள்­நோக்­கத்­து­ட­னும் இப்­பு­கார் எழுப்­பப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே நில முறை­கேடு நடந்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­வது குறித்து விளக்­கம் அளிக்­கு­மாறு ராமர் கோவில் அறக்­கட்­ட­ளைக்கு உத்­த­ரப் பிர­தேச முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் உத்­த­ர­விட்­டுள்­ளார்.