புதுடெல்லி: கொரோனா இரண்டாவது அலையில் கர்ப்பிணிப் பெண்களும் அண்மையில் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது.
முதல் அலையுடன் ஒப்பிடும்போது இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது என அந்த மன்றம் தெரிவித்துள்ளது.
எனவே, கர்ப்பிணிப் பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி போடவேண்டியதன் அவசியத்தை அண்மைய புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக மருத்துவ ஆராய்ச்சி மன்றம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தொற்று பாதிப்பால் கர்ப்பிணிப் பெண்களும் புதுத் தாய்மார்களும் இறக்கும் விகிதம் முதல் அலையில் 0.75 விழுக்காடாக இருந்தது. ஆனால் இரண்டாவது அலையில் இந்த இறப்பு விகிதமானது 5.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

