குண்டுகள், வெடிபொருள்கள் கண்டெடுப்பு; தமிழக உளவுத்துறை அளித்த தகவல் கேரள வனப்பகுதிகளில் ஆயுதப் பயிற்சி முகாம்: அரசு அதிர்ச்சி

குண்டுகள், வெடிபொருள்கள் கண்டெடுப்பு; தமிழக உளவுத்துறை அளித்த தகவல் கேரள வனப்பகுதிகளில் ஆயுதப் பயிற்சி முகாம்: அரசு அதிர்ச்சி

2 mins read
ec73c4d2-bfdf-4253-9e32-cefceb5f7557
ரகசிய ஆயுதப் பயிற்சி முகாம் நடைபெற்றதாக நம்பப்படும் பகுதியை காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது.படம்: ஊடகம் -

திரு­வ­னந்­த­புரம்: கேரள மாநி­லம் கொல்­லம் பகு­தி­யில் ரக­சிய ஆயு­தப் பயிற்சி முகாம் நடை­பெற்­றது தெரிய வந்­தி­ருப்­பதை அடுத்து அப்­ப­கு­தி­யில் கண்­கா­ணிப்பு தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

ஏதே­னும் தீவி­ர­வாத அமைப்பு இவ்­வாறு பயிற்சி அளித்­ததா என விசா­ரணை நடந்து வரு­கிறது.

கேரள எல்­லைப் பகு­தி­களில் உள்ள கிரா­மங்­களில் சில ஆயுதக் குழுக்­கள் ரக­சிய ஆயு­தப் பயிற்சி­களில் ஈடு­ப­டு­வ­தாக தமி­ழக உள­வுத்­துறை சில மாதங்­க­ளுக்கு முன்பு கேரள அர­சுக்கு எச்­ச­ரிக்கை குறிப்பு அனுப்பி இருந்­தது.

அச்­ச­ம­யம் திட்­டக்­குடி வனப்­பகு­தி­யில் ஆயு­தப் பயிற்சி முகாம் நடத்­தப்­பட்­டது உறு­தி­யா­னது. அதில் கேர­ளா­வில் இருந்து மட்­டு­மல்­லா­மல் தமி­ழ­கம், கர்­நா­டகா, ஆந்­தி­ரா­வைச் சேர்ந்த பலர் கலந்துகொண்­ட­தாக காவல்­துறை அறிக்கை தெரி­விக்­கிறது என 'மாத்­ரு­பூமி' ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மேலும் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் இருந்து வந்த சில இளை­யர்­களை போலி­சார் மடக்­கிப் பிடித்து விசா­ரித்­த­போது அவர்­களும் ஆயு­தப் பயிற்சி முகா­மில் பங்­கேற்க வந்­ததை ஒப்புக்கொண்­ட­னர். இதை­ய­டுத்து அவர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இதன் பின்­னர் கடந்த மார்ச் மாதம் தமி­ழக ரக­சி­யப் பிரிவு போலி­சார் அளித்த தக­வலை அடுத்து திட்­டக்­கு­டி­யில் கேரள போலி­சார் திடீர் ஆய்வு மேற்­கொண்­ட­னர். அப்­போது தீவி­ர­வா­தக் குழுக்­கள் அங்கு முகாம் அமைத்­த­தற்­கான ஆதா­ரங்­கள் எது­வும் கிடைக்­க­வில்லை என்­ற­போ­தி­லும் சில வெடி­குண்­டு­கள் கைப்­பற்­றப்­பட்­டன.

இதை­ய­டுத்து தீவி­ர­வாத போக்­கு­டைய சில குழுக்­களை கேரள காவல்துறை தீவி­ர­மாக கண்­காணித்து வரு­கிறது. மேலும் அக்­கு­ழு­வைச் சேர்ந்­த­வர்­க­ளின் தொலை­பேசி அழைப்­பு­கள் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன.

இதற்­கி­டையே கடந்த திங்­கட்­கி­ழமை கொல்­லம் அருகே உள்ள படம் என்ற பகு­தி­யில் வனத்­துறை அதி­கா­ரி­கள் அதி­ரடிச் சோதனை மேற்­கொண்­ட­னர். அப்­போது இரு ஜெலட்­டின் குச்­சி­கள், நான்கு டெட்­ட­னேட்­டர்­கள் உள்­ளிட்ட பொருள்­க­ளைக் கைப்­பற்­றி­னர்.

இதே­போன்ற சில வெடி­குண்­டு­கள் கொன்னி வனப்­ப­கு­தி­யி­லும் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று கண்­டெ­டுக்­கப்­பட்­டன. இரண்டு இடங்­களில் வெடி­பொ­ருள்­கள் சிக்கி இருப்­பதை அடுத்து பர­ப­ரப்பு நில­வு­கிறது. இதற்­கி­டையே செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று தீவி­ர­வாத எதிர்ப்­புப் படை­யி­னர் இரு இடங்­க­ளுக்­கும் நேரில் சென்று ஆய்வு மேற்­கொண்­ட­னர்.

தமி­ழக உள­வுத்­துறை அளித்­துள்ள அறிக்­கை­யின்­படி கேரள போலி­சார் அடுத்­த­டுத்து சில அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது.

ஆறு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

இதற்கிடையே, ஆந்திராவில் மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நேற்று முன்தினம் மம்பா என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது ஆறு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

ஆறு பேரில் இரு பெண்களும் அடங்குவர். மேலும், அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவரும் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.