நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கோல்கத்தாவில் கடந்த இரு தினங்களாக பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் நடமாட்டத்தைக் குறைத்துக்கொண்டு வீடுகளில் முடங்கி உள்ளனர். இதேபோல் மும்பையிலும் நீடித்து வரும் மழையால் அங்குள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மும்பையின் கிழக்கு, மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 28.5 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. படம்: இபிஏ
மேற்கு வங்கத்தில் கனமழை
1 mins read
-

