புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமிப் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 73 நாள்களுக்குப் பிறகு 798,656 ஆகக் குறைந்து உள்ளது. அதேவேளையில் குணமடைவோர் அதிகரித்து உள்ளனர் என்று மத்திய சுகா தாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அன்றாட பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 62,480 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருந்தது.
தொடா்ந்து 36வது நாளாக புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரே நாளில் 88,977 போ் குணமடைந்து வீடு திரும்பினர். நாட்டில் ஒரே நாளில் 1,587ஆக தொற்று குறைந்துள்ளது. இதுவரை 383,490 போ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.