கங்கையில் மரப்பெட்டியில் மிதந்து வந்த ‘கங்கை மகள்’

லக்னோ: கங்கை நதி­யில் ஆடி ஆடி மிதந்து வந்த மரப்­பெட்டி­யில் இருந்து பச்­சி­ளம் பெண் குழந்தை ஒன்று பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டது.

உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தின் கங்கை நதி­யில் படகுப் போக்கு வரத்து செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள காஜி­புர் பகு­தி­யில் பட­கோட்டியாகப் பணி­யாற்றி வரும் குல்லு சௌத்ரி, தனது பணி முடிந்து வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்தபோது நதி­யில் ஒரு மரப்­பெட்டி மிதந்து வரு­வ­தைப் பார்த்­தார்.

அதை மீட்டு, திறந்து பார்த்த போது அத­னுள் ஒரு பெண் குழந்தை இருந்­தது. அதோடு குழந்­தை­யின் ஜாத­கம், துர்க்கையம்­ம­னின் புகைப்­ப­டங்­களும் இருந்­தன. குழந்­தை­யின் பெயர், 'கங்கை மகள்' என்றும் குறிப்­பி­டப்பட்­டி­ருந்­தது.

குழந்­தையை தனது வீட்­டுக்கு எடுத்­துச்சென்ற சௌத்ரி, அதை தானே வளர்க்­கப் போவ­தாக அக்­கம்­பக்­கத்தின­ரி­டம் கூறினார்.

இந்த தகவல் சமூக வலை­த்­தளங்­களில் பர­வி­ய­தைத் தொடர்ந்து, அதி­கா­ரி­கள் குழந்­தையை மீட்டு மாநில அர­சின் ஆஷா ஜோதி மையத்­தில் சேர்த்­த­னர்.

கங்கை தாய் எனக்குப் பரிசாக அளித்த குழந்தையை நானே என் உயிரினும் மேலாக வளர்ப்பேன்.

படகோட்டி குல்லு சௌத்ரி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!