புதுடெல்லி: இந்திய விமானப் படையில் வரும் 2022ம் ஆண்டில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என்று இந்திய விமானப் படைத் தலைவர் ஆர்.கே.எஸ். பதொரியா தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப் படைக்கு வலுசேர்க்கும் வகையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து 59,000 கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அந்நாட்டு அரசுடன் மத்திய பாஜக அரசு கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது.
இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டுடனான ஒப்பந்தப்படி இதுவரை 8க்கும் மேற்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன.
மேலும் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வரவுள்ளன.
இதற்கிடையே தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் விமானப்படை பயிற்சிக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இந்திய விமானப் படைத் தலைவர் ராகேஷ் குமார் சிங் பதொரியா, ரஃபேல் போர் விமானங்களை விமானப் படையில் 2022ஆம் ஆண்டில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
"கொள்ளைநோய் பரவல் காரணமாக ஒன்றிரண்டு விமானங்கள் தாமதமாக வந்துள்ளன.
"ஆனால் மற்ற விமானங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வந்துள்ளதால் திட்டமிட்டபடி ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும்," என்று திரு கே. எஸ். பதொரியா தெரிவித் தார்.

