உச்ச நீதிமன்றம் விசாரணை: காங்கிரஸ் வலியுறுத்து

உச்ச நீதிமன்றம் விசாரணை: காங்கிரஸ் வலியுறுத்து

1 mins read
cbf0102e-dea0-4031-b97a-9b8a4dfba3b1
-

புது­டெல்லி: ராமர் கோவில் அறக்­கட்­டளை மீதான குற்­றச்­சாட்­டு­களை உச்­ச ­நீ­தி­மன்­றம் விசா­ரிக்க வேண்­டும் என காங்­கி­ரஸ் கட்சி வலி­யு­றுத்தி உள்­ளது.

இது­தொ­டர்­பாக செய்­தி­யாளர்­க­ளி­டம் பேசிய அக்­கட்­சி­யின் செய்­தித் தொடர்­பா­ளர் ரந்­தீப் சுர்­ஜே­வாலா, ராம­பி­ரான் பெய­ரில் பார­திய ஜனதா தலை­வர்­கள் கொள்­ளை­யடிக்­கும் சம்­ப­வங்­கள் தொடர்ந்து கொண்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார் என 'இந்து தமிழ்' ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

உச்­ச ­நீ­தி­மன்ற உத்­த­ர­வின் பேரில்­தான் அயோத்­தி­யில் ராமர் கோவில் கட்­டப்­பட்டு வரு­வ­தாக குறிப்­பிட்ட அவர், தற்­போது எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிப்­பது உச்­ச­ நீ­தி­மன்­றத்­தின் கடமை என்­றார்.

ராமர் கோவில் கட்­டு­மா­னப் பணிக்­கான ஒட்­டு­மொத்த பணப் பரி­மாற்­றத்­தை­யும் உச்­ச ­நீ­தி­மன்­றம் தனது மேற்­பார்­வை­யின்­கீழ் தணிக்கை செய்­ய­வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்ள ரந்­தீப் சுர்­ஜே­வாலா, தவறு நிகழ்ந்­தி­ருந்­தால் குற்­ற­வா­ளி­கள் தண்­டிக்­கப்­பட வேண்­டும் எனக் கூறி­யுள்­ளார்.

"ராமர் கோவில் அறக்­கட்­ட­ளையை அமைத்­த­வர் பிர­த­மர் மோடி. அவ­ருக்­கும் இதில் உண்­மை­யைக் கண்­ட­றி­யும் கடமை இருக்­கிறது.

"எனவே இது குறித்து பிரதமர் மோடி உரிய வகையில் விசா­ரித்து உண்­மையை வெளிக்­கொ­ணர வேண்­டும். இதில் தயக்­கம் கூடாது," என ரந்­தீப் சுர்­ஜே­வாலா மேலும் தெரி­வித்­துள்ளார்.