எய்ம்ஸ்: அலட்சியமாக இருந்தால் மீண்டும் இரண்டாவது அலை போல் பாதிப்பு ஏற்படும்

எய்ம்ஸ்: அலட்சியமாக இருந்தால் மீண்டும் இரண்டாவது அலை போல் பாதிப்பு ஏற்படும்

2 mins read
f305cfc9-92f8-4e1b-bb2b-06a73031ff2c
-

கோல்­கத்தா: கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் தடுப்பு நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­மல் அலட்­சி­ய­மாக செயல்­பட்­டால் அடுத்த மூன்று அல்­லது நான்கு மாதங்­களில் இரண்­டா­வது அலை­யில் ஏற்­பட்ட பாதிப்­பு­களை இந்­தியா மீண்­டும் சந்­திக்க நேரி­டும் என எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யின் இயக்­கு­நர் ரன்­தீப் குலே­ரியா தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா தொற்­றுப்­ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் பிரிட்­ட­னி­டம் இருந்து இந்­தியா பாடம் கற்­றுக்கொள்ள வேண்­டும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

இந்த இக்­கட்­டான நேரத்­தில் கொரோனா கிருமி மர­ப­ணுப் பரி­சோ­த­னை­களை அதி­க­ரிக்க வேண்­டும் என்­றும் புதிய வகை கிரு­மி­க­ளுக்கு எதி­ராக தடுப்­பூ­சி­கள் எந்த அள­வுக்கு பலன் அளிக்­கிறது என்­பதை ஆய்வு செய்ய வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

கொரோனா தொற்­றுப்­ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த பிரிட்­டன் மாதக் கணக்­கில் ஊர­டங்கை நீட்­டித்துக் கொண்டே செல்­வ­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், ஊர­டங்கு தளர்த்­தப்­பட்ட பிறகு ஏதா­வது ஒரு புதிய வகை கிருமி கண்­ட­றி­யப்­பட்­டால் உட­ன­டி­யாக ஊர­டங்கு அமல் செய்­யப்­ப­டு­கிறது என சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"பிரிட்­ட­னில் 18 வய­துக்கு மேற்­பட்­டோ­ரில் 81 விழுக்­காட்­டி­ன­ருக்கு முதல் தவணை கொரோனா தடுப்­பூசி செலுத்­தப்­பட்­டுள்­ளது. 59 விழுக்காட்டினருக்கு இரண்டு தவணை தடுப்­பூ­சி­யும் போடப்­பட்­டுள்­ளது. எனி­னும் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக பிரிட்­டன் முழு­வ­தும் ஊர­டங்கு அமல் செய்­யப்­ப­டு­கிறது," என்று ரன்­தீப் குலே­ரியா மேலும் கூறி­யுள்­ளார்.

ரூ.4 லட்­சம் இழப்­பீடு; கைவிரித்த மத்­திய அரசு

இதற்­கி­டையே கொரோனா தொற்­றால் உயி­ரி­ழப்­போர் குடும்­பத்­தா­ருக்கு நான்கு லட்­சம் ரூபாய் இழப்­பீடு வழங்க இய­லாது என உச்ச நீதி­மன்­றத்­தில் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக பொது­நல மனு ஒன்று தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அதன் மீதான விசா­ர­ணை­யின் போது பேரி­டர்­க­ளால் உயி­ரி­ழப்­போர் குடும்­பத்­தா­ருக்கு இழப்­பீடு வழங்க பேரி­டர் மேலாண்மை சட்­டத்­தில் வழி­வகை செய்­யப்­பட்­டுள்­ளது என்று மத்­திய அரசு சுட்­டிக்­காட்­டி­யது.

கொரோ­னா­வால் உயி­ரி­ழப்­பது தொடர்­க­தை­யாக உள்­ளது என்­றும் பேரி­டர் சட்­டத்­தின் கீழ் இழப்­பீடு வழங்­கக் கூறு­வது பொருத்­த­மாக இருக்­காது என்­றும் மத்­திய அரசு மேலும் தெரி­வித்­துள்­ளது.

கொரோனா போலி மருந்து; இரண்டு மருத்­து­வர்­கள் கைது

கொரோனா, கறுப்­புப் பூஞ்சை நோய்­க­ளைக் குணப்­படுத்தும் என்று கூறி போலி மருந்­து­களை விற்­பனை செய்த இரு மருத்­து­வர்­கள் உட்­பட பத்து பேரை டெல்லி போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

அவர்­க­ளி­டம் இருந்து ஏரா­ள­மான போலி மருந்­து­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன. கைதான இரு மருத்­து­வர்­களும் உத்­த­ரப் பிர­தே­சத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.