இந்தியாவில் பரவும் 'டெல்டா பிளஸ்' தொற்று: மூன்று மாநிலங்களில் பாதிப்பு

இந்தியாவில் பரவும் 'டெல்டா பிளஸ்' தொற்று: மூன்று மாநிலங்களில் பாதிப்பு

1 mins read
cf61db4c-2c43-405e-982b-23acc648c22a
-

மும்பை: இந்­தி­யா­வில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று பர­வத் தொடங்கி உள்­ளது.

மகா­ராஷ்­டிரா, மத்­தி­யப் பிர­தே­சம், கேரளா ஆகிய மூன்று மாநி­லங்­க­ளி­லும் இத்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

டெல்டா பிளஸ் கொரோனா தொற்­றால் பெரும் அச்­சு­றுத்­தல் இல்லை என மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் மகா­ராஷ்­டி­ரா­வில் இந்­தப் புதிய வகை தொற்­றால் 21 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அம்­மாநில சுகா­தார அமைச்­சர் ராஜேஷ் தோப் தெரி­வித்­துள்­ளார்.

அம்­மா­நி­லத்­தில் அண்­மைய சில தினங்­க­ளா­கத்­தான் கொரோனா தொற்று எண்­ணிக்கை குறைந்து வரு­கிறது.

தற்­போது அன்­றா­டத் தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை ஆறு ஆயி­ரத்­துக்­கும் கீழ் பதி­வாகி வரும் நிலை­யில் டெல்டா பிளஸ் தொற்று புதிய அச்­சு­றுத்­த­லாக இருக்கிறது.

இதற்­கி­டையே கேர­ளா­வில் மூன்று பேர் இந்­தப் புதிய வகைத் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

பாலக்­காடு, பத்­த­னம்­திட்டா ஆகிய இரு மாவட்­டங்­களில் டெல்டா பிளஸ் தொற்று பர­வி­யி­ருப்­பதை அம்­மா­நில சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் உறுதி செய்­துள்­ள­னர்.

பாதிக்­கப்­பட்ட மூவ­ரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

மத்­திய பிர­தே­சத்­தில் நான்கு பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என அம்­மா­நில சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் டெல்டா பிளஸ் பாதிப்பு குறித்து மக்­கள் அச்­சம் கொள்­ளத் தேவை­யில்லை என­வும் இந்த வகைத் தொற்­றால் அதிக ஆபத்து இல்லை என்­றும் மத்­திய அரசு கூறி­யுள்­ளது.