புதுடெல்லி: ராகுல் காந்தி உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அண்மையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால், ராகுல் காந்தி போட்டுக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் செய்தியா ளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராகுல் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றார்.
"நீங்கள் (ராகுல்) இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் உடனடியாக போட்டுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்," என்று அமைச்சர் கூறியுள்ளார்.

