தொற்று பாதிப்பு 14 நாள்களாக 5 விழுக்காட்டுக்கும் கீழ் பதிவு

தொற்று பாதிப்பு 14 நாள்களாக 5 விழுக்காட்டுக்கும் கீழ் பதிவு

1 mins read
4defe2ff-5ca4-4d42-b9b7-a25de368f9e2
-

புது­டெல்லி: கடந்த 14 நாள்­க­ளாக இந்­தி­யா­வில் கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு ஐந்து விழுக்­காட்­டுக்­கும் கீழ் பதி­வாகி வரு­கிறது. எனி­னும் இதை வைத்து இரண்­டா­வது கொரோனா அலை முடி­வுக்கு வந்து விட்­ட­தாக முடிவு செய்­து­வி­டக்­கூ­டாது என நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அன்­றாட தொற்று எண்­ணிக்கை தொடர்ந்து 14 நாள்க­ளுக்கு 5 விழுக்­காடு அல்­லது அதற்­கும் கீழ் பதி­வாகி வந்­தால் கட்­டுப்­பா­டு­க­ளின்றி இயல்­பு­நிலை திரும்­பு­வ­தாக கரு­த­லாம் என உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் கடந்த 14 நாள்­களில் தொற்று பாதிப்பு விகி­தம் சரா­ச­ரி­யாக 3.32 விழுக்­கா­டாக உள்­ளது. மேலும் அன்­றாட தொற்று ­பா­திப்பு கடந்த 14 நாள்களில் ஒரு­மு­றை­கூட 5 விழுக்­காட்­டைத் தாண்­ட­வில்லை.

இந்­நி­லை­யில் டெல்டா பிளஸ் தொற்­றின் பர­வல் வேகம் குறித்து முழு விவ­ரங்­களும் கிடைக்­க­வில்லை என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டும் நிபு­ணர்­கள், கேரளா உள்­ளிட்ட சில மாநிலங்­களில் தொற்று விகி­தம் அதி­க­மாக இருப்­பதை கவ­னிக்க வேண்­டும் என்­கின்­ற­னர்.