செப்டம்பர் முதல் இரண்டு வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி

செப்டம்பர் முதல் இரண்டு வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி

2 mins read
244243df-1d1f-4790-bd95-36d2fac42731
-

புது­டெல்லி: கொரோனா இரண்­டா­வது அலை­யின் தாக்­கம் குறைந்து வரும் நிலை­யில், இந்­தி­யா­வில் இரண்டு வயது குழந்­தை­கள் முதல் 17 வய­துக்கு உட்­பட்­ட­வர்­க­ளுக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய டெல்லி எய்ம்ஸ் மருத்­து­வ­மனை இயக்­கு­நர் ரந்­தீப் குலே­ரியா, செப்­டம்­பர் மாதம் முதல் இந்­தப் பணி தொடங்­கும் என்­றார்.

நாடு முழு­வ­தும் தடுப்­பூசி போடும் பணி நடை­பெற்று வரு­கிறது. இந்­நி­லை­யில் குழந்­தை­க­ளுக்­கும் தடுப்­பூசி தயா­ரா­குமா எனும் எதிர்­பார்ப்பு பெற்­றோர் மத்­தி­யில் நிலவி வந்­தது.

இதற்­கி­டையே, பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­தின் கோவேக்­சின் தடுப்­பூசியை குழந்­தை­க­ளுக்குச் செலுத்தி பரி­சோ­திப்­ப­தற்­கான நடை­முறை கடந்த 7ஆம் தேதி தொடங்­கி­யது.

எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யில் நடை­பெற்ற இந்த பரி­சோ­தனை முயற்­சிக்கு மத்­திய மருந்து தரக்­கட்­டுப்­பாட்டு அமைப்­பின் நிபு­ணர் குழு அனு­மதி அளித்­தது.

அடுத்­த­டுத்து மூன்றுகட்டப் பரி­சோ­த­னை­கள் வெற்­றி­க­ர­மாக நடத்­தப்­பட்டால்தான் பொது­மக்­கள் பயன்­பாட்­டுக்கு அந்த தடுப்பூசியைப் பயன்­ப­டுத்த அனு­மதி வழங்­கப்­படும். இந்­நி­லை­யில் பாரத் பயோ­டெக் நிறு­வ­னம் இரண்டு கட்ட பரி­சோ­த­னை­களை வெற்­றி­க­ர­மாக முடித்­துள்­ளது.

"மூன்­றா­வது கட்­டப் பரி­சோ­த­னை­யும் முடி­யும் பட்­சத்­தில் செப்­டம்­பர் மாதத்­தில் இருந்து இரண்டு வயது குழந்­தை­கள் முதல் 17 வய­துக்கு உட்­பட்­ட­வர்­க­ளுக்கு தடுப்­பூசி செலுத்­தப்­படும்," என ரந்தீப் குலே­ரியா தெரி­வித்­துள்­ளார்.

இதற்கு மத்­திய அர­சின் அனு­மதி கிடைக்­கும் என தாம் நம்­பு­வ­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார். இத்தகவல் பெற்றோர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

இதற்­கி­டையே இரு தவணை தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்டுக் கொண்­டால், 95 விழுக்­காடு உயிரிழப்­பு­களைத் தவிர்க்­க­லாம் என்று இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றம் தெரி­வித்­துள்­ளது. இதே போல் முதல் தடுப்­பூசி மட்­டும் போட்­டுக்கொண்­டால் 82 விழுக்­காடு மர­ணத்தை தவிர்க்­க­லாம் என்­றும் அம்­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

இறுதிக்கட்ட பரிசோதனை நடப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் தகவல்