'காங்கிரசுக்கு பிரியங்கா அற்புதமான முகம்'

'காங்கிரசுக்கு பிரியங்கா அற்புதமான முகம்'

1 mins read
7eb23b7b-7d40-4a9a-80e1-01ca82b1f0de
-

லக்னோ: உத்­த­ரப்­பி­ர­தேச மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் காங்­கி­ரஸ் பொதுச்­செ­ய­லா­ளர் பிரி­யங்கா காந்தி முதல்­வர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்க வாய்ப்­புண்டு என்று தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இதற்­கி­டையே அம்­மா­நி­லத்­தில் உள்ள பெண்­க­ளின் பாது­காப்பு கட­வுள் கையில்­தான் உள்­ளது என்று பிரியங்கா கூறியுள்­ளார்.

உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் பெண்­கள் மீதான தாக்­கு­தல்­களும் பாலி­யல் பலாத்­கா­ரங்­களும் அதி­க­ரித்து வரு­வ­தாக காங்­கி­ரஸ் குற்­றம் சாட்டி உள்­ளது.

இந்­நி­லை­யில் மதுரா பகு­தி­யில் 17 வயது சிறு­மி­யைப் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­திய சிலர் அச்­சி­று­மியை இரண்­டா­வது மாடி­யில் இருந்து கீழே தள்­ளி­விட்ட கொடூ­ரம் அரங்­கே­றி­யுள்­ளது.

இது­கு­றித்து டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள பிரி­யங்கா காந்தி, உத்­த­ரப் பிர­தேச மக்­கள் உயிர் பயத்­தில் நடுங்­கு­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.

"பாதிக்­கப்­பட்ட சிறுமி உயி­ருக்­குப் போரா­டு­கி­றாள். இங்கு நடை­பெ­றும் காட்­டாட்­சி­யில் பெண்­க­ளுக்­குப் பாது­காப்பு இல்லை. இங்­குள்ள அர­சாங்­கம் உறங்­கு­கிறது," என்று டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார் பிரி­யங்கா காந்தி.

இந்­நி­லை­யில் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் கட்­சியை வழி­ந­டத்­தும் அணித் தலை­வ­ராக பிரி­யங்கா செயல்­ப­டு­கி­றார் என காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் சல்­மான் குர்­ஷித் தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும் பிரி­யங்கா முதல்­வர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டு­வாரா என்ற கேள்­விக்கு தாம் பதில் அளிக்­கப்போவ­தில்லை என்­றார் அவர். "ஆனால், பிரி­யங்கா காந்தி காங்­கி­ர­சுக்­கான ஓர் அற்­பு­த­மான சிறந்த முகம்," என்­றார் சல்­மான் குர்­ஷித்.