மும்பை, கோல்கத்தாவில் போலி தடுப்பூசி முகாம்கள்

மும்பை, கோல்கத்தாவில் போலி தடுப்பூசி முகாம்கள்

2 mins read
e0db8e1c-7150-4ba7-b8e9-5fe74d57e1f7
-

2,053 பேருக்கு போலி தடுப்பூசி போட்ட கும்பல்

மும்பை: தடுப்­பூசி தட்­டுப்­பாட்­டைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்ட ஒரு கும்­பல், தனி­யார் மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த தடுப்­பூசி முகாம்­கள் போல் அமைத்து ஏரா­ள­மா­னோ­ருக்கு போலி தடுப்­பூசி போட்ட சம்­ப­வம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கட்­ட­ண­மாக ஆள் ஒன்­றுக்கு ரூபாய் 1,260 வசூ­லித்­த­னர். ஆனால் ஒரு­வ­ருக்­கும் தடுப்­பூசி போட்­ட­தற்­கான சான்­றி­தழ் வழங்­கப்­ப­ட­வில்லை. சிலர் இது குறித்து கேட்ட பின்பு, பிர­பல மருத்­து­வ­மனை ஒன்­றின் பெய­ரில் தடுப்­பூ­சிச் சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டன.

மும்பை காந்­தி­விலி எஸ்.வி. ரோடு பகு­தி­யில் ஹிரா­னந்­தானி அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு சங்க நிர்­வா­கத்தை பிர­பல தனி­யார் மருத்­து­வ­மனை சார்­பில் அணு­கிய ஒரு கும்­பல், அங்கு வசித்து வரும் 390 பேருக்கு போலி தடுப்­பூசி போட்­டது.

மேலும் தடுப்­பூசி போட்­ட­தற்­கான தக­வல்­கள் கோவின் இணை­யத் தளத்­தில் இடம்­பெ­றா­த­தால் அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்பு வாசி­கள் அதிர்ச்சி அடைந்­த­னர். மேலும் தடுப்­பூசி போட்ட யாருக்­கும் காய்ச்­சல், உடல்­வலி போன்ற பக்க விளை­வு­கள் ஏற்­ப­டா­த­தால், தங்­க­ளுக்குப் போடப்­பட்­டது போலி தடுப்­பூசி என்­றும், பண­மோ­சடி கும்­பல் கைவ­ரிசை காட்­டி­ய­தும் தெரி­ய­வந்­தது.

தடுப்­பூசி சான்­றி­த­ழில் இடம்­பெற்­றுள்ள பிர­பல தனி­யார் மருத்துவமனைகள் தாங்­கள் இது­போன்ற தடுப்­பூசி முகாம்­களை நடத்­த­வில்லை என்று மறுப்பு தெரி­வித்­த­ன. பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் காவல்­து­றை­யில் அளித்த புகா­ரின் பேரில், மோச­டிக் கும்­பலை சேர்ந்த 5 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். மேலும் ஒரு மருத்­து­வர் முன்­பிணை கேட்டு நீதி­மன்­றத்­தில் மனு செய்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த விவ­கா­ரம் பர­ப­ரப்பு ஏற்­படுத்­திய நிலை­யில், வழக்­கின் நிலை அறிக்­கையை தாக்­கல் செய்­யு­மாறு மாநில அர­சுக்கு மும்பை உயர் ­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. அதன்­படி விசா­ரணை நிலை அறிக்­கையை நேற்று அரசு தாக்­கல் செய்­தது.

அந்த அறிக்­கை­யில் இடம்­பெற்­றுள்ள பர­ப­ரப்பு தக­வல்­கள் வரு­மாறு:-

போலி கொரோனா தடுப்­பூசி புகார் தொடர்­பாக 4 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்டு உள்­ளன. 400 பேரி­டம் சாட்­சி­யம் பெறப்­பட்டு உள்­ளது. இந்த வழக்­கில் ஒரு மருத்துவர் உள்­பட சிலர் அடை­யா­ளம் காணப்­பட்டு உள்­ள­னர். மேலும் பலர் தலை­ம­றை­வாக உள்­ள­னர். இந்த மோசடி கும்­பல் 9 முகாம்­களை நடத்தி, 2,053 பேருக்கு போலி கொரோனா தடுப்­பூசி போட்டு இருப்­பது இது­வ­ரை­யி­லான நில­வ­ரப்­படி தெரி­ய­வந்­துள்­ளது.

இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது. இதை­ய­டுத்து வழக்கு விசா­ர­ணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.