இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்பவர் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க முகக்கவசத்துடன் வலம் வருகிறார்.
கான்பூரில் வசிக்கும் அவரை அப்பகுதி மக்கள் ‘தங்க பாபா’ என்றுதான் குறிப்பிடுகின்றனர்.
முகக்கவசம் மட்டும் அல்லாமல் பல தங்க நகைகளையும் அணிந்துள்ளார் மனோஜ். “இனி வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாகி விட்டதால் இவ்வாறு தங்கத்தினாலான முகக்கவசம் அணியவேண்டும் என்று தோன்றியது,” என்கிறார் மனோஜ்.