கர்நாடகாவில் எட்டு மாவட்டங்களில் உயிரிழப்புகள் இல்லை

கர்நாடகாவில் எட்டு மாவட்டங்களில் உயிரிழப்புகள் இல்லை

1 mins read
fda72754-8d82-4a18-a5f4-3fedacfe579d
-

கோல்­கத்தா: கர்­நா­ட­கா­வில் கிரு­மித்­தொற்­றுப் பர­வல் வேக­மா­கக் குறைந்து வரு­கிறது. இந்­நி­லை­யில் அங்­குள்ள பள்­ளி­க­ளைத் திறப்­பது குறித்து விரை­வில் முடி­வெ­டுக்­கப்­படும் என மாநில அரசு அறி­வித்­துள்­ளது.

கர்­நா­ட­கா­வில் நேற்று முன்தினம் 114 பேர் கிரு­மித் தொற்­றுக்­குப் பலி­யா­கி­னர். எனி­னும் எட்டு மாவட்­டங்­களில் எந்த உயி­ரி­ழப்­பும் பதி­வா­க­வில்லை என்று சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

அதி­க­பட்­ச­மாக மைசூ­ரு­வில் 22 பேரும் பெங்­க­ளூ­ரில் 17 பேரும் பலி­யாகி விட்­ட­னர். மொத்த பலி எண்­ணிக்கை 34,539ஆக கூடி­யுள்­ளது. புதி­தாக சுமார் 3,300 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் அம்­மா­நி­லத்­தில் உள்ள பள்­ளி­க­ளைத் திறப்­பது குறித்து சுகா­தா­ரத் துறை­யின் ஆலோ­ச­னை­க­ளைப் பெற்று முடி­வெ­டுக்­கப்­படும் என பள்­ளிக் கல்வித்­துறை அமைச்­சர் சுரேஷ்­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

குழந்­தை­கள் பள்­ளிக்­குச் செல்­லா­மல் நீண்ட காலம் வீட்­டி­லேயே முடங்கி இருப்­பது அவர்­க­ளது எதிர்­கா­லத்­துக்கு நல்­ல­தல்ல என்று குறிப்­பிட்ட அவர், கடந்த காலத்­தில் பள்­ளி­கள் மூலம் கொரோனா தொற்று பர­வ­வில்லை எனச் சுட்­டிக் காட்­டி­னார்.

இந்­நி­லை­யில் கர்­நா­ட­கா­வில் பெரிய மண்­ட­பங்­க­ளி­லும், சொகுசு தங்கு விடு­தி­க­ளி­லும் திரு­ம­ணங்­களை நடத்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும், பெரும்­பா­லான கடை­களும் இயங்­க­லாம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"பெங்­க­ளூ­ரு­வில் குறைந்த அள­வில் அர­சுப் பேருந்­து­கள் இயக்­கப்­படு­கின்­றன. திரு­மண நிகழ்­வு­களில் 40 பேர் மட்­டுமே பங்­கெ­டுக்க வேண்­டும். இந்த அறி­விப்பு வரும் 28ஆம் தேதி முதல் அம­லுக்கு வரும்," என்­றும் அம்­மா­நில முதல்­வர் எடி­யூ­ரப்பா தெரி­வித்­துள்­ளார்.