புதுடெல்லி: நாட்டின் நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கொரோனா நெருக்கடியின்போதும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறி வருவதாக டெல்லியில் நடைபெற்ற இந்தியா-அமெரிக்கா உத்திசார் அமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
மேலும், தொழில் சீர்திருத்த நடவடிக்கைகளால் எளிதில் தொழில் தொடங்கும் நாடாக இந்தியா மாறிவருவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இதன் வெளிப்பாடாக சரக்கு, சேவை வரி வசூல் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்க முதலீட்டாளர்கள் இடையே சுமூக சூழல் நிலவுவதாக கூறினார்.
"நிதி திருத்தங்கள் உள்ளிட்ட அனைத்துமே உலக அரங்கில் இந்தியாவை வலிமையுள்ள பொருளாதார நாடாக பார்க்க வைக்கும். நாட்டில் ஒவ்வொரு துறையும் வெளிநாட்டு முதலீட்டிற்கு ஏற்றதாக மாறி வருகிறது," என்றார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

