51 நாள்களில் 28 மாநிலங்கள் சென்று திரும்பிய தாய், மகன்

51 நாள்களில் 28 மாநிலங்கள் சென்று திரும்பிய தாய், மகன்

2 mins read
62bc08d2-c0ff-45d1-97c3-cbe237304e5a
மகனுடன் மித்ரா சதீஷ். படம்: ஊடகம் -

திரு­வ­னந்­த­புரம்: பெருந்­தொற்று காலத்­தில் ஒரு தாயும் மக­னு­மாக சேர்ந்து 51 நாட்­களில் 28 மாநி­லங்­க­ளுக்கு சாக­சப் பய­ணம் மேற்­கொண்டு ஊர் திரும்பி உள்­ள­னர்.

கேர­ளா­வைச் சேர்ந்த 40 வய­தான மித்ரா சதீஷ், கொச்­சி­யில் உள்ள அரசு ஆயுர்­வேத கல்­லூ­ரி­யில் துணைப் பேரா­சி­ரி­யை­யாக பணி­யாற்றி வரு­கி­றார். இவ­ரது கண­வர் சதீஷ்.

இத்­தம்­ப­தி­யர்க்கு 15 வய­தில் ஒரு மகளும் 10 வய­தில் ஒரு மக­னும் உள்­ள­னர்.

சாக­சப் பய­ணங்­களை மேற்­கொள்­வ­தில் அதிக ஈடு­பாடு கொண்­ட­வர் மித்ரா. ஊர­டங்­கின்­போது வீட்­டி­லேயே இருக்­கா­மல் காரில் சாக­சப் பய­ணம் மேற்­கொள்­வது என அவர் முடிவு செய்­த­போது அவ­ரது மகன் நாரா­ய­ண­னும் தாயு­டன் இணைந்­தார்.

இதை­ய­டுத்து கடந்த மார்ச் 17ஆம் தேதி இரு­வ­ரும் தங்­கள் பய­ணத்தைத் தொடங்­கி­னர். அடுத்து வந்த 51 நாட்­களில் இரு­வ­ரும் 28 மாநி­லங்­க­ளுக்­குச் சென்­றுள்­ள­னர்.

அவற்றுள் தமிழகம், புதுவை, ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவை அடங்கும். தமது கணவரும் குடும்பத்தாரும் தந்த ஆதரவால்தான் இந்தப் பயணம் சாத்தியமானது என்று குறிப்பிடும் மித்ரா சதீஷ், உலகம் முழுவதையும் காரில் சுற்றி வரவேண்டும் என்பதே தமது அடுத்த இலக்கு என்கிறார்.

"முதற்­கட்­ட­மாக 100 நாள்­களில் ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வை­யும் சுற்­றிப் பார்க்க விரும்­பி­னேன். கொரோனா நெருக்­க­டி­யால் பயண காலத்தை 51 நாட்­க­ளா­கக் குறைத்­து­விட்­டோம். காடு, மலை, பள்­ளத்­தாக்கு என அனைத்து நிலப்­ப­ரப்­பு­க­ளை­யும் வானி­லை­க­ளை­யும் கடந்து சென்­றுள்­ளோம். பழங்­கு­டி­கள், கிராம மக்­கள் என பல்­வேறு தரப்பு மக்­க­ளைச் சந்­தித்­தோம். புதிய கலா­சா­ரங்­கள் அறி­மு­க­மா­கின," என்­கி­றார் மித்ரா.

பல மாநி­லங்­க­ளுக்­குச் சென்­ற­போது அங்கு கிடைக்­கும் உணவு வகை­கள், பேசும் மொழி­கள், வாழ்­வி­யலை அறிந்து கொண்­ட­தா­கச் சொல்­ப­வர்,. நாளொன்­றுக்கு 17 மணி நேரம் பய­ணம் செய்­த­தா­கத் தெரி­வித்­தார். இதன்­மூ­லம் 16,800 கிலோ­மீட்­டர் தொலைவை வெற்றி­க­ர­மாக கடந்த இரு­வ­ரும் மே 6ஆம் தேதி சொந்த ஊர் திரும்பி உள்­ள­னர். ஒன்­றரை லட்­சம் ரூபாய் செல­விட்டு இப்­ப­ய­ணத்தை மேற்­கொண்­ட­தா­கச் சொல்­கி­றார் மித்ரா.