ஐந்து லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு சலுகை

ஐந்து லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு சலுகை

1 mins read
2a110bed-0136-481c-aab1-ab80bb0c5b82
-

புது­டெல்லி: கொரோனா நெருக்­கடி கட்­டுக்­குள் வந்த பிறகு இந்­தி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ளும் வெளி­நாட்­டுச் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்கு விசா கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­பட மாட்­டாது என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

நாட்­டில் முத­லில் நுழை­யும் 5 லட்­சம் பய­ணி­கள் விசா கட்­ட­ணம் செலுத்த வேண்­டாம் என நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், சுற்­று­லாத்­துறை சார்ந்த நட­வ­டிக்­கை­கள் ஊக்­கு­விக்­கப்­படும் என்­றார்.

"சுற்­றுலா முக­வர்­க­ளுக்கு பத்து லட்ச ரூபா­யும் உரி­மம் பெற்ற சுற்­றுலா வழி­காட்­டி­க­ளுக்கு ஒரு லட்­சம் ரூபா­யும் கட­னாக வழங்­கப்­படும். அனைத்­து­ல­கப் பய­ணங்­கள் தொடங்­கிய பிறகு இந்­தி­யா­வுக்கு வரும் முதல் 5 லட்­சம் வெளி­நாட்டுப் பய­ணி­கள் விசா கட்டண சலு­கை­யைப் பெறு­வர்," என்­றார் நிர்­மலா சீதா­ரா­மன்.