மம்தா: ஆளுநர் ஓர் ஊழல்வாதி

மம்தா: ஆளுநர் ஓர் ஊழல்வாதி

1 mins read
e2a25547-277f-4ddb-9ef2-d81d2d8442ff
-

கோல்­கத்தா: மேற்கு வங்க ஆளு­நர் ஜெக்­தீப் தாங்­கர் ஓர் ஊழல்­வாதி என அம்­மா­நில முதல்­வர் மம்தா பானர்ஜி சாடி­யுள்­ளார்.

அத்­த­கைய ஒரு­வர் ஆளு­நர் பத­வி­யில் நீடிக்க மத்­திய அரசு அனு­ம­திப்­பது ஏன் என அவர் கேள்வி எழுப்பி உள்­ளார்.

"கடந்த 1996ஆம் ஆண்டு தொடுக்­கப்­பட்ட ஹவாலா வழக்­கில் ஆளு­நர் ஜெக்­தீப் தாங்­கர் பெய­ரும் குற்­றப்­பத்­தி­ரி­கை­யில் இடம்­பெற்­றுள்­ளது.

"மேற்கு வங்க மாநி­லத்­தின் வடக்­குப் பகு­திக்கு அவர் திடீ­ரென சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­ட­தன் பின்­ன­ணி­யில் அர­சி­யல் இருக்­கிறது. அவர் பாஜக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை மட்­டுமே சந்­தித்துப் பேசி உள்­ளார்.

"இத்­த­கைய நட­வ­டிக்­கை­யின் மூலம் மேற்கு வங்­கத்­தி­லி­ருந்து அதன் வடக்­குப் பகு­தி­யைத் தனி­யா­கப் பிரிப்­ப­தற்­கான சதி நடப்­ப­தாக நான் உணர்­கி­றேன்," என்று மம்தா பானர்ஜி நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது தெரி­வித்­தார்.