மும்பை: மகாராஷ்டிர மாநில சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அம்மாநில முதல்வரையும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் அடுத்தடுத்து சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்று தினங்களில் இருமுறை இச்சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன.
அண்மையில் டெல்லி சென்ற முதல்வர் உத்தவ் தாக்கரே, அங்கு பிரதமர் மோடியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதை அடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இடையேயான உறவில் சிறு விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று முன்தினம் திடீரென சந்தித்துப் பேசினார் சஞ்சய் ராவத்.

